பக்கம் எண் :

1080

2651.







பலவு நீள்பொழில் தீங்கனி தேன்பலா
     மாங்கனி பயில்வாய
கலவ மஞ்ஞைகள் நிலவுசொற் கிள்ளைகள்
     அன்னஞ்சேர்ந் தழகாய
குலவும் நீள்வயற் கயலுகள் கோட்டூர்நற்
     கொழுந்தே யென்றெழுவார்கள்
நிலவு செல்வத்த ராகிநீள் நிலத்திடை
     நீடிய புகழாரே.                    4
2652.







உருகு வாருள்ளத் தொண்சுடர் தனக்கென்றும்
     அன்பராம் அடியார்கள்
பருகும் ஆரமு தெனநின்று பரிவொடு
     பத்திசெய் தெத்திசையும்
குருகு வாழ்வயல் சூழ்தரு கோட்டூர்நற்
     கொழுந்தேயென் றெழுவார்கள்
அருகு சேர்தரு வினைகளும் அகலும்போய்
     அவனருள் பெறலாமே.              5


மாகிய இறைவரைக் கொழுந்தீசரே என்று வணங்கிட எழுவார்
பொன்னுலகில் தேவரோடும் இனிதிருப்பர்.

     கு-ரை: அடியாவர் தமக்கு எல்லாம் நம்பனார் பொன்னுலகில்
தேவரோடும் குனிதிருப்பர்.

    4. பொ-ரை: பாலச்சுளை, மாங்கனி முதலிய தீங்கனிகளையும்
தேனையும் உண்ட தோகைமயில்களும் கிளிகளும் அன்னங்களும்
விளையாடும் மரஞ்செடி கொடிகள் பலவும் நிறைந்த பொழில்களையும்,
கயல்கள் உகளும் அழகிய வயல்களையும் உடைய கோட்டூரில் விளங்கும்
நற்கொழுந்தே என்று போற்றியவர் அழியாத செல்வமுடையவராய்
இவ்வுலகில் புகழோடு வாழ்வர்.

     கு-ரை: பலவு-பல மரஞ்செடி கொடிகளும் கலவம்-தோகை. மஞ்ஞை
மயில். கிள்ளை-கிளி. நிலவு செல்வத்தர்-அழியாத ஐசுவரியமுடையவர்.
நீடிய-அழியாத.

     5. பொ-ரை: உள்ளம் உருகுவார்க்கு ஒண்சுடராகவும், என்றும்
தன்மேல் அன்புடையடியார்க்கு ஆரமுதாகவும் விளங்குபவனே