பதிக வரலாறு:
சைவமுதல்மறையோர்
அன்பிலாலந்துறை முன்னவனைத் தொழுது
பதியும் பணிந்து வடகரை மாந்துறை அணைந்தார். வலஞ்செய்து
உள்புக்குத்தாழ்ந்து, பரிதி மதி மருத்துக்கள் தொழுது வழிபாடு செய்ய
நின்ற நிலையைச் சிறப்பித்துப் பாடியருளியது இத்திருப்பதிகம்.
பண்: நட்டராகம்
ப.தொ.எண்:
246 |
|
பதிக
எண்: 110 |
திருச்சிற்றம்பலம்
2659.
|
செம்பொ
னார்தரு வேங்கையும் ஞாழலுஞ்
செருந்திசெண் பகமானைக்
கொம்பும் ஆரமும் மாதவி சுரபுனை
குருந்தலர் பரந்துந்தி
அம்பொன் நேர்வரு காவிரி வடகரை
மாந்துறை யுறைகின்ற
எம்பி ரானிமை யோர்தொழு பைங்கழல்
ஏத்துதல் செய்வோமே. 1 |
1.
பொ-ரை: வேங்கை, ஞாழல், செருந்தி, செண்பக மலர்களையும்
ஆனைக் கொம்பையும், சந்தனமரம், மாதவி மலர், சுரபுன்னை மலர்,
குருந்து மலர் ஆகியவற்றையும் உந்திவரும் காவிரி வடகரையில் உள்ள
மாந்துறையில் உறையும் எம்பிரானின் இமையோர் வணங்கும் திருவடிகளை
ஏத்துவோம்.
கு-ரை: வேங்கை பொன்போல் பூக்கும், வேங்கை
முதலியவை
காவிரி வெள்ளத்தால் உந்தப்பட்டுவருவன.
ஆரம்-சந்தனம்,
பொன் நேர்வருகாவிரி:- பொன்னி. 147
|