பக்கம் எண் :

1086

2660.







விளவு தேனொடு சாதியின் பலங்களும்
     வேய்மணி நிரந்துந்தி
அளவி நீர்வரு காவிரி வடகரை
     மாந்துறை யுறைவானத்
துளவ மான்மக னைங்கணைக் காமனைச்
     சுடவிழித் தவனெற்றி
அளக வாணுதல் அரிவைதன் பங்கனை
     யன்றிமற் றறியோமே.            2
2661.







கோடு தேன்சொரி குன்றிடைப் பூகமுங்
     கூந்தலின் குலைவாரி
ஓடு நீர்வரு காவிரி வடகரை
     மாந்துறை யுறைநம்பன்
வாடி னார்தலை யிற்பலி கொள்பவன்
     வானவர் மகிழ்ந்தேத்தும்
கேடி லாமணி யைத்தொழல் அல்லது
     கெழுமுதல் அறியோமே.
          3


     2. பொ-ரை: விள முதலிய பயன்தரும் மரங்களின் பழங்களோடு
முத்துக்களையும் அடித்துவரும் காவிரி வடகரையில் உள்ள மாந்துறையில்,
மால் மகனாகிய காமனைக் கனல் விழியால் எரித்து விளங்கும் இறைவனை,
அம்பிகைபாகனை அன்றி உலகில் வேறொன்றையும் அறியோம்.

     கு-ரை: விளவு-விளா. வேய்மணி-மூங்கில்முத்து. துளவ மால்
மகன்-துழாய் அணிந்த திருமாலுக்கு மகனான. அளகம்-கூந்தல் ஈற்றடியைச்
சைவர் மறத்தல் கூடாது. (பா. 3, 4 பார்க்க).

     3. பொ-ரை: தேன் சொரியும் குன்றிடைத் தோன்றிக் கமுகு
முதலிய மரங்களின் இலைகளை வாரிவரும் காவிரி வடகரையில்
மாந்துறையில் விளங்கும் கேடிலாமணியைத் தொழுதலையல்லது
வேறொருவரைத் தொழுதல் அறியோம்.

     கு-ரை: வாடினார்தலை:- பிரம கபாலம். கேடிலாமணி-இத்தலத்து
இறைவர் திருப்பெயர். மாந்துறைமணி என்பன முன் வழங்கியவை.
கெழுமுதல்-நிறைவு, பொருத்தம்.