2662.
|
இலவ
ஞாழலும் ஈஞ்சொடு சுரபுன்னை
யிளமரு திலவங்கம்
கலவி நீர்வரு காவிரி வடகரை
மாந்துறை யுறைகண்டன்
அலைகொள் வார்புனல் அம்புலி மத்தமும்
ஆடர வுடன்வைத்த
மலையை வானவர் கொழுந்தினை அல்லது
வணங்குதல் அறியோமே.
4 |
2663.
|
கோங்கு
செண்பகங் குருந்தொடு பாதிரி
குரவிடை மலருந்தி
ஓங்கி நீர்வரு காவிரி வடகரை
மாந்துறை யுறைவானைப்
பாங்கி னாலிடுந் தூபமும் தீபமும்
பாட்டவி மலர்சேர்த்தித்
தாங்கு வாரவர் நாமங்கள் நாவினில்
தலைப்படுந் தவத்தோரே. 5
|
4.
பொ-ரை: இலவம் முதலிய மரங்களை அடித்துவரும் காவிரி
வடகரையில் உள்ள மாந்துறை உறை தலைவனும் கங்கை, பிறை, அரவு
முதலியவற்றைத் தலையில் சூடியவனும் ஆகிய வானோர் தலைவனையன்றி
வணங்குதலறியோம்.
கு-ரை:
இலவம் முதலியவை மரங்கள். ஈஞ்சு-ஈந்து; போலி,
கண்டன்- தலைவன். புனல்-கங்கை. அம்புலி-பிறை. மலை-அருள்
நிதிதரவரும் ஆனந்த மலையே திருப்பள்ளியெழுச்சி.
5.
பொ-ரை: கோங்கு, செண்பகம் முதலிய மரங்களை
அடித்துவரும் காவிரி வடகரை மாந்துறையில் உறைவானை, தூபம்
தீபம் தோத்திரம் நிவேதனம் ஆகியவற்றால் மலர்தூவி வழிபட்டு அவன்
திருநாமங்களைச் சொல்லுவார் மேலான தவமுடையோராவர்.
கு-ரை:
குரவு-குராமரம். பாங்கு-சிவாகம விதி. பாட்டு-தோத்திரம்.
அவி-நிவேதனம். தாங்குவார்-சிவபூஜாதுரந்தரர். தலைப்படல்-சேர்தல்.
|