2664.
|
பெருகு
சந்தனங் காரகில் பீலியும்
பெருமரம் நிமிர்ந்துந்திப்
பொருது காவிரி வடகரை மாந்துறைப்
புனிதனெம் பெருமானைப்
பரிவி னாலிருந் திரவியும் மதியமும்
பார்மன்னர் பணிந்தேத்த
மருத வானவர் வழிபடு மலரடி
வணங்குதல் செய்வோமே.
6 |
2665.
|
நறவம்
மல்லிகை முல்லையும் மௌவலும்
நாண்மல ரவைவாரி
இறவில் வந்தெறி காவிரி வடகரை
மாந்துறை யிறையன்றங்
கறவ னாகிய கூற்றினைச் சாடிய
அந்தணன் வரைவில்லால்
நிறைய வாங்கி வலித்தெயி லெய்தவன்
நிரைகழல் பணிவோமே. 7
|
6.
பொ-ரை: சந்தனம் அகில் முதலிய மரங்களை அடித்துவரும்
காவிரி வடகரை மாந்துறைப் புனிதனின் இரவி, மதி, மன்னர்கள்,
மருத்துக்கள் அன்போடு வழிபடும் திருவடிகளை வணங்குவோம்.
கு-ரை:
பரிவு-பக்தி. இரவி-சூரியன். மருதவானவர்-மருத்துக்கள்.
இதில், இத்தலத்தை வழிபட்டவர்களை உணர்த்தியருளினார்.
7.
பொ-ரை: மல்லிகை முல்லை முதலிய மலர்களை மிகுதியாக வாரி
வரும் காவிரி வடகரை மாந்துறை இறைவனும் காலனைக் காய்ந்தவனும்,
மேருவில்லால் முப்புரம் எரித்தவனும் ஆகிய பெருமானின் திருவடிகளைப்
பணிவோம்.
கு-ரை:
நறவம்-தேன், மணம், மௌவல்-காட்டு மல்லிகை. இறவில்-
மிகுதியில், அறவணாகிய கூற்று-தருமராசன். வரைவில்-மேருவாகியவில்,
வாங்கி-வளைத்து. எயில்-திரிபுரம்.
|