2666.
|
மந்த
மார்பொழின் மாங்கனி மாந்திட
மந்திகள் மாணிக்கம்
உந்தி நீர்வரு காவிரி வடகரை
மாந்துறை யுறைவானை
நிந்தி யாஎடுத் தார்த்தவல் லரக்கனை
நெரித்திடு விரலானைச்
சிந்தி யாமனத் தாரவர் சேர்வது
தீநெறி யதுதானே. 8 |
2667.
|
நீலமாமணி
நித்திலத் தொத்தொடு
நிரைமலர் நிரந்துந்தி
ஆலி யாவரு காவிரி வடகரை
மாந்துறை யமர்வானை
மாலும் நான்முகன் தேடியுங் காண்கிலா
மலரடி
யிணைநாளும்
கோல மேத்திநின் றாடுமின் பாடுமின்
கூற்றுவன் நலியானே. 9
|
8.
பொ-ரை: மந்திகள் மாங்கனிகளை உண்டு மகிழுமாறு அடர்ந்து
வளர்ந்த மாமரங்களை உடைய மாந்துறையில் எழுந்தருளிய இறைவனை,
நிந்தித்து அவனை மலையோடு எடுத்து ஆரவாரித்த இராவணனைக் கால்
விரலால் நெரித்தவனைச் சிந்தியாதவர் தீநெறி சேர்வர்.
கு-ரை:
மந்தம்-தென்றல். நிந்தியா-நிந்தித்து. சிந்தியா மனத்தார்-
சிந்திக்காத மனமுடையவர்.
தீநெறி-நரகிற்
செலுத்தும் தீயகதி.
9,
பொ-ரை: நீல மணிகளையும், முத்துக்களையும்,
மலர்களையும்
அடித்து வரும் காவிரி வடகரை மாந்துறையில் திருமாலும் பிரமனும்
தேடிக் காணமுடியாதவாறு எழுந்தருளிய இறைவனின் திருவடிகளைப்
பாடி வழிபடுங்கள். நம்மைக் கூற்றுவன் நலியான்.
கு-ரை:
நித்திலத்தொத்து-முத்துக்கொத்து. ஆலியா-
|