2668.
|
நின்று
ணுஞ்சமண் தேரரும் நிலையிலர்
நெடுங்கழை நறவேலம்
நன்று மாங்கனி கதலியின் பலங்களு
நாணலின் நுரைவாரி
ஒன்றி நேர்வரு காவிரி வடகரை
மாந்துறை யொருகாலம்
அன்றி யுள்ளழிந் தெழும்பரி சழகிது
அதுவவர்க் கிடமாமே.
10 |
2669.
|
வரைவ
ளங்கவர் காவிரி வடகரை
மாந்துறை யுறைவானைச்
சிரபு ரம்பதி யுடையவன் கவுணியன்
செழுமறை நிறைநாவன் |
துளித்து. இணை-இரண்டு.
நாளும்-நாடோறும். கோலம்-சிவக்கோலம்.
நலியான்-வருத்தமாட்டான்.
10.
பொ-ரை: சமணரும் தேரரும் நிலையற்ற உரையினராவர்.
நீண்ட மூங்கில், தேன் பொருந்திய வேலமரம், மாங்கனி, வாழைக்கனி,
நாணலின் நுரையை அடித்துக் கொண்டு வரும் காவிரியின் வடகரையிலுள்ள
திருமாந்துறை இறைவனை எக்காலத்தும் நெஞ்சுருகி வழிபடும் பரமானந்த
நிலையே மேலானது.
கு-ரை:
கழை-மூங்கில், கரும்பு-நறவு-மணம், கதலி-வாழை. பலம்-
பழம். ஒருகாலம் அன்றி:- எக்காலத்தும்.
உள் அழிந்து
எழும் பரிசு-நெஞ்சுருகி எழுகின்ற தன்மை. அது-
அப்பரமானந்தநிலை.
11.
பொ-ரை: மலைவளங்களைக் கொணர்ந்து தரும் காவிரி
வடகரையில் - மாந்துறையில் உறைபவன் மீது கவுணிய கோத்திரத்தனாய்,
சிறந்த வேதங்கள் நிறைந்த நாவினனும் சிவனுக்குத் திருத்தொண்டு
செய்வதில் வல்லவனுமான காழி ஞானசம்பந்தன் பாடிய அன்புறு
பாமாலைகளை ஓதி வழிபடுவோர் அல்லல் பாவம் ஆகியன நீங்கப்
பெறுவர்.
|