2683.
|
மங்கைகூறினன்
மான்மறியுடை
அங்கையானுறை யாடானை
தங்கையாற்றொழு தேத்தவல்லவர்
மங்குநோய்பிணி மாயுமே. 3 |
2684.
|
சுண்ணநீறணி
மார்பிற்றோல்புனை
அண்ணலானுறை யாடானை
வண்ணமாமலர் தூவிக்கைதொழ
எண்ணுவாரிட ரேகுமே. 4 |
விறைவனை மலர்தூவித்
தொழுதால் உங்கள் வினைகள் யாவும் அழியும்.
கு-ரை:
வற்றிய பிரமகபாலத்தையேந்தி நின்று ஆடுதலையுடைய
சிவபிரான் ஆடானையை மலர்தூவித் தொழுதால் வினைகள் அழியும்.
தோடு-பூவிதழ்.
3.
பொ-ரை: மங்கை பங்கனும் மான் கன்றைக் கையில்
ஏந்தியவனுமாகிய சிவபிரான் உறையும் திருவாடானையை அடைந்து
அவ்விறைவனைத் தம் கைகளைக் கூப்பிப் போற்றவல்லவர்களின்
நோய்கள் கெடும் பிணிகள் (வினைகள் மாயும்).
கு-ரை:
மங்கைபங்கன், மான்கன்றேந்திய திருக்கரத்தன்.
ஆடானையைத் தம்கைகளால் தொழுது ஏத்தவல்லவர் நோயும் பிணியும்
மாயும். மங்குதல்-கெடுதல்.
4.
பொ-ரை: சந்தனச் சுண்ணமும் திருநீறும் அணிந்த
மார்பில்
பூணநூலின்கண் மான்தோலைப் புனைந்துள்ள தலைமைக் கடவுளாகிய
சிவபிரானுறையும் திருவாடானையை அடைந்து, அவ்விறைவனை அழகும்
மணமும் கூடிய மலர்களைத்தூவிக் கைதொழ எண்ணுபவர்களின் இடர்
ஏகும்.
கு-ரை:
தோல்-மான்றோல் பூணுநூலொடு சேர்த்துத் தரித்துக்
கொள்வது. (தி.1 ப.28 பா.2; தி.1 ப.133 பா.4; தி.1 ப.80 பா9; தி.1 ப.6 பா.3.)
வண்ணம்-அழகு. எண்ணுவார்-தியானம்புரிவார். (பா.8.)
|