பக்கம் எண் :

1102

2688.



வெந்தநீறணி மார்பிற்றோல்புனை
அந்தமில்லவ னாடானை
கந்தமாமலர் தூவிக்கைதொழும்
சிந்தையார்வினை தேயுமே.          8
2689.



மறைவலாரொடு வானவர்தொழு
தறையுந்தண்புன லாடானை
உறையும்ஈசனை யேத்தத்தீவினை
பறையுநல்வினை பற்றுமே.           9


சிவபெருமான் உறையும் திருவாடானையை அடைந்து அவ்விறைவனை
அழகும் மணமும் கொண்ட மலர்களைத் தூவித் தொழுது நாள்தோறும்
அவன் திருக்கோயிலை வலம்வருவார் வினைகள் மாயும்.

     கு-ரை: சடையசைதலையும் ஒளிர்தலையும் மாலையையும் கூறலாம்.
நலம்-அழகு. வலங்கொள்ளல் வழிபாட்டின் உறுப்புக்களுள் ஒன்று.

     8. பொ-ரை: தீயிடைவெந்த திருநீற்றை அணிந்தவரும் மார்பின்
கண் மான்தோலை அணிந்தவரும், தோற்றக் கேடு இல்லாதவருமான
சிவபெருமான் உறையும் திருவாடானையை அடைந்து அவ்விறைவரை
மணமலர்களைத்தூவி வழிபடும் சிந்தனையை உடையவர் களின் வினைகள்
தேயும்.

     கு-ரை: பா.4, பார்க்க. ‘ஆதியும் அந்தமும் இல்லா அரும்
பெருஞ்சோதி’ சிந்தையார் வினை-சிந்தனை உடையவரது வினை.

     9. பொ-ரை: வேதங்களில் வல்ல அந்தணர்களோடு விண்ணில்
உறையும் தேவர்களும் வந்து வணங்கும் நீர்வளம்சான்ற திருவாடானையில்
உறையும் ஈசனை ஏத்தத் தீவினைகள் அழியும். நல்வினைகள் வந்துசேரும்.

     கு-ரை: வலார்-வல்லவர்; பூசுரர். வானவர்-சுரர். ஆடானையில்
எழுந்தருளும் உடையவனை, பறையும்-அழியும், பறைவது தீவினை.
பற்றுவது நல்வினை.