பக்கம் எண் :

1104

113. சீகாழி

பதிக வரலாறு:

     137ஆவது பதிகத் தலைப்பைக் காண்க.

பண்: செவ்வழி

ப.தொ.எண்: 249                              பதிக எண்: 113

திருச்சிற்றம்பலம்

2692.







பொடியிலங்குந் திருமேனி
     யாளர் புலியதளினர்
அடியிலங்குங் கழலார்க்க
     ஆடும் மடிகள்ளிடம்
இடியிலங்குங் குரலோதம்
     மல்கவ் வெறிவார்திரைக்
கடியிலங்கும் புனல்முத்
     தலைக்குங்கடற் காழியே.      1
2693.



மயலிலங்குந் துயர்மா
     சறுப்பானருந் தொண்டர்கள்
அயலிலங்கப் பணிசெய்ய
     நின்றவ் வடிகள்ளிடம்


     1. பொ-ரை: திருநீறணிந்த திருமேனியர். புலித்தோல் உடுத்தவர்.
திருவடிகளில் விளங்கும் கழல்கள் ஆர்க்க ஆடுபவர். அவர் உறையுமிடம்,
இடிபோல் முழங்கும் கடல் அலைகளின் நீர்ப் பெருக்கு முத்துக்களை
மிகுதியாகக் கொண்டு வந்து கரையில் சேர்க்கும் காழிப்பதியாகும்.

     கு-ரை: இலங்கும்-விளங்கும். கடல் அலையொலி இடி யொலி
போலுள்ளதாம். கடி-விரைவு, மிகுதி. அடிகள் இடம் கடற்காழி என்றவாறே
மேலும் இயைத்துக் கொள்க.

     2. பொ-ரை: மயக்கம் தரும் பிறவித்துயராகிய மாசினைப் போக்க
எண்ணிய தொண்டர்கள் தான் வாழும் இடங்கள் எங்கும் பணிசெய்ய
நின்ற சிவபிரான் உறையுமிடம், மேகம் போல வரையாது கொடுக்கும்
கொடையாளர்களுடன் தேவதஒலிபரவும் சிறப்பினதாய, கயல்மீன்கள்
தவழும் வயல்கள் சூழ்ந்த காழிப் பதியாகும்.