பக்கம் எண் :

1105





புயலிலங்குங் கொடையாளர்
     வேதத்தொலி பொலியவே
கயலிலங்கும் வயற்கழனி
     சூழுங்கடற் காழியே.         2
   
2694.







கூர்விளங்குந் திரிசூல
     வேலர்குழைக் காதினர்
மார்விலங்கும் புரிநூலு
     கந்தமண வாளனூர்
நேர்விலங்கல் லனதிரை
     கள்மோதந் நெடுந்தாரைவாய்க்
கார்விலங்கல் லெனக்கலந்
     தொழுகுங்கடற் காழியே.      3
   
2695.



குற்றமில்லார் குறைபாடு
     செய்வார் பழிதீர்ப்பவர்
பெற்றநல்ல கொடிமுன்
     னுயர்த்த பெருமானிடம்


     கு-ரை: துயர்மாசு-உம்மைத்தொகை. ‘கைம்மாறு வேண்டாக்
கடப்பாடுமாரி மாட்டு என் ஆற்றுங்கொல்லோ உலகு’ (குறள். 211.)
கொடையாளர்-அந்தணர்.

     3. பொ-ரை: கூரிய முத்தலைச் சூலத்தை ஏந்தியவர். குழையணிந்த
செவியினர். மார்பில் முப்புரிநூல் விளங்கும் மணவாளக் கோலத்தினர்.
அவருக்குரிய ஊர், மலைபோலக் கடல் அலைகள் வந்தலைக்கும் காழிப்
பதியாகும்.

     கு-ரை: திரிசூலமாகிவேலுடையவர், மார்வு-மார்பு. உகந்த மணவாளன்.
விலங்கல்-மலை. தாரை-நீரொழுக்கு, பெருமழை.

     4. பொ-ரை: குற்றம் இல்லாதவர். தம் குறைகளைக் கூறி
வேண்டுபவருக்கு வரும் பழிகளைத் தீர்ப்பவர். விடைக்கொடியை
உயர்த்தியவர். அப் பெருமானுக்குரிய இடம், நல்லவர், மனத்தால் இனியவர்,
வேதங்களைக் கற்றுணர்ந்து நல்லோர் செய்யும் பிழைதெரிந்து போக்கித்
தலையளி செய்வோர் ஆகியவர்கள் வாழும் கடற்காழியாகும்.

     கு-ரை: குற்றம் இல்லார். குறைபாடு செய்பவரது பழியைத்