பக்கம் எண் :

1107

கோடிலங்கும் பெரும்பொழில்
     கள்மல்கப் பெருஞ்செந்நெலின்
காடிலங்கும் வயல்பயிலும்
     அந்தண்கடற் காழியே.         6
2698.







மலையிலங்குஞ் சிலையாக
     வேகம்மதில் மூன்றெரித்
தலையிலங்கும் புனற்கங்கை
     வைத்தவ்வடி கட்கிடம்
இலையிலங்கும் மலர்க்கைதை
     கண்டல்வெறி விரவலாற்
கலையிலங்குங் கணத்தினம்
     பொலியுங்கடற் காழியே.       7
2699.



முழுதிலங்கும் பெரும்பொருள்
     வாழும்முரண் இலங்கைக்கோன்
அழுதிரங்கச் சிரமுர
     மொடுங்கவ் வடர்த்தாங்கவன்


வயல்களை உடையதுமான காழிப்பதியாகும்.

     கு-ரை: தோடும் குழையும் இலங்கும் காதர். வேதர்-வேதத்தை
யுடையவர். கோடு-கொம்பு. செந்நெலின்காடு-செந்நெற்பயிர் நெருக்கம்.

     7. பொ-ரை: மேருமலையை வில்லாகக் கொண்டு முப் புரங்களை
எரித்து, அலைகளோடு கூடிய கங்கையை முடிமிசை வைத்துள்ள
அடிகட்கு இடம், இலைகளோடு பூத்து விளங்கும் தாழை நீர் முள்ளி
ஆகியவற்றின் மணத்துடன் வேதம் வல்லமறையவர் கணம் வாழும்
காழிப்பதியாகும்.

     கு-ரை: வைத்த அடிகள் என்னும் பெயரெச்சத்தொடர்க்கு
இடையில் வகரமெய் பிற்பதிப்புக்களில் இருக்கின்றது. கைதை-தாழை.
கண்டல்-நீர்முள்ளி, கலையிலங்குங்கணத் தினம்:- கல்வி விளங்கும்
மறையவர் கூட்டம்; மான்கூட்டம்.

     8. பொ-ரை: உலகில் மாறுபாடுடையவனாய் வாழ்ந்த இராவணன்
அழுது இரங்க, அவன் தலை மார்பு ஆகியன ஒடுங்க அடர்த்துப்