|
தொழுதிரங்கத்
துயர்தீர்த்
துகந்தார்க்
கிடமாவது
கழுதும்புள்ளும் மதிற்புறம
தாருங்கடற்
காழியே. 8 |
2700.
|
பூவினானும்
விரிபோதின்
மல்குந்திரு
மகடனை
மேவினானும் வியந்தேத்த
நீண்டா
ரழலாய்நிறைந்
தோவியங்கே யவர்க்கருள்
புரிந்தவ்
வொருவர்க்கிடங்
காவியங்கண் மடமங்கையர்
சேர்கடற்
காழியே. 9 |
2701.
|
உடைநவின்
றாருடைவிட்
டுழல்வார்
இருந்தவத்தார்
முடைநவின் றம்மொழி
யொழித்துகந்தம்
முதல்வன்னிடம் |
பின் அவன் தொழுது
இரங்கிய அளவில் அவனது துயர் தீர்த்தருளிய
இறைவற்கு இடம் வண்டும் பறவைகளும் மதிற்புறத்தே வாழும்
கடற்காழியாகும்.
கு-ரை:
முரண்-வலி, மாறுபாடு. சிரம்உரம்-தலையும் மார்பும்
உகந்தார்- உயர்ந்த சிவபிரான். கழுது-வண்டு. பேயும் ஆம். புள்-பறவை.
9. பொ-ரை:
நான்முகனும், தாமரைமலரில் வாழும் திருமகளை
மருவிய திருமாலும் வியந்து போற்ற, அழலுருவாய் நீண்டுப்பின் அதனின்
நீங்கி அவர்களுக்கு அருள்புரிந்த இறைவற்கு இடம், குவளை மலர்
போலும் கண்களை உடைய அழகிய மகளிர் வாழும் கடற்காழியாகும்.
கு-ரை:
விரிபோது-பூத்த தாமரைமலர். மேவினான்-விரும்பிய
திருமால். ஓவி-நீங்கி புரிந்த ஒருவர் என்னும் பெயரெச்சத் தொடரில்
வகரம் விரித்தல் விகாரம்.
10. பொ-ரை:
உடையோடும், உடையின்றியும் திரிபவரும்,
கடுமையான விரதங்களைத் தவமாக மேற்கொள்பவருமான புத்தர்
|