2704.
|
பாதம்விண்ணோர்
பலரும்
பரவிப்
பணிந்தேத்தவே
வேதநான்கும் பதினெட்டொ
டாறும்
விரித்தார்க்கிடம்
தாதுவிண்ட மதுவுண்டு
மிண்டிவரு
வண்டினம்
கீதம்பாட மடமந்தி
கேட்டுகளுங்
கேதாரமே. 2 |
|
|
2705.
|
முந்திவந்து
புரோதாய
மூழ்கி
முனிகள்பலர்
எந்தைபெம்மா னெனநின்றி
றைஞ்சும்
மிடமென்பரால்
மந்திபாயச் சரேலச்
சொரிந்தும்
முரிந்துக்கபூக்
கெந்தநாறக் கிளருஞ்
சடையெந்தை
கேதாரமே. 3 |
2.
பொ-ரை: விண்ணோர் பலரும்பாதம் பரவித் தொழ
நான்கு
வேதங்களையும் ஆறு அங்கங்களையும் பதினெண் புராணங்களையும்
விரித்துரைத்த சிவபிரானுக்கு இடம், மலரின் மது உண்ட வண்டுகள்
கீதம்பாட மந்திகள் கேட்டு மகிழும் திருக்கேதாரமாகும்.
கு-ரை:
விண்ணோர் பலரும் பாதம் பரவிப் பணிந்து ஏத்த
விர்த்தார்க்கு இடம் கேதாரம் என்க. வண்டினம் கீதம்பாட மந்திகள்
கேட்டுத் துள்ளும்.
3.
பொ-ரை: முனிவர்கள் உதயத்துக்கு முன் எழுந்து
நீராடி
எந்தைபெருமான் என இறைஞ்சச் சடாதாரியான சிவபிரானுக்குரிய இடம்,
மந்திகள் பாய்தலால் சரேலெனத் தேனைச் சொரிந்து முரிந்து வீழ்ந்த
மலர்களின் மணங்கமழும் திருக்கேதாரமாகும்.
கு-ரை:
புரோதாயம்புர+உதயம் = புரோதயம், புர:- கீழ்த்திசை
உதயத்திற்கு முன்னர் எனலுமாம். நீராண்ட புரோதாயம் ஆடப்
பெற்றோம் புரோதயம் என்பது புரோதாயம் எனப் பிழையாய் நின்றது.
சிவாலிங்கம், சடாட்சரம் ஆதினம் ஆதிபன் ஆம்பா (கண்ணாம்பா
|