|
மேழிதாங்கி
யுழுவார்கள்
போலவ்விரை
தேரிய
கேழல்பூழ்தி கிளைக்க
மணிசிந்துங்
கேதாரமே. 5 |
|
|
2708.
|
நீறுபூசி
நிலத்துண்டு
நீர்மூழ்கி
நீள்வரைதன்மேல்
தேறுசிந்தை யுடையார்கள்
சேரும்
இடமென்பரால்
ஏறிமாவின் கனியும்பலா
வின்இருஞ்
சுளைகளும்
கீறிநாளும் முசுக்கிளையோ
டுண்டுகளுங்
கேதாரமே. 6 |
|
|
2709.
|
மடந்தைபாகத்
தடக்கிம்
மறையோதி
வானோர்தொழத்
தொடர்ந்தநம்மேல் வினைதீர்க்க
நின்றார்க்
கிடமென்பரால் |
கு-ரை:
ஊழிஊழி உணர்வார்கள். புழுதியின் மரூஉ பூழ்தி,
(பொழுது- போழ்து), கிளைக்க-கிண்ட.
6. பொ-ரை:
நீரில் மூழ்கித் திருநீற்றை அணிந்து, நிலத்திடை
உண்டு, நீண்ட மலையின்மேல் தெளிந்த சிந்தை உடையவர்களான
தாபதர்கள் வாழும் இடம், குரங்குகள் மா,பலா மரங்களில் ஏறி
அவற்றின் கனிகளைக் கீறி உண்டு மகிழ்ந்து வாழும் திருக்கேதாரமாகும்.
கு.ரை:
தாபதரொழுக்கம் முதலீரடிகளில் குறிக்கப்பட்டது. தேறு
சிந்தை-தெளிந்த உள்ளம். மாமரத்தில் ஏறிப் பழங்களையும் பலா
வைக்கீறிச் சுளைகளையும் உண்டு திரிவன குரங்கினங்கள்.
7. பொ-ரை:
சிவபிரான் வானோர் தொழுமாறு மறை ஓதியும்,
மங்கை பங்கராகியும், வேதாகமங்களை அருளியும், அடியவர்
வினைகளைத் தீர்த்தற்கு எழுந்தருளி விளங்கும் இடம், காற்றடிக்கப் பூத்த
வேங்கை மலர்கள் பாறைகளின் மேல் உதிர்ந்து கிடந்து புலியென மற்ற
புலிகளை மருள்விக்கும் திருக்கேதாரமாகும்.
|