2715.
|
வாழ்ந்தநாளும்
இனிவாழு
நாளும்இவை
யறிதிரேல்
வீழ்ந்தநாளெம் பெருமானை
யேத்தாவிதி
யில்லிகாள்
போழ்ந்ததிங்கட் புரிசடையி
னான்றன்
புகலூரையே
சூழ்ந்தவுள்ளம் முடையீர்கள்
உங்கள்துயர்
தீருமே. 2
|
2716.
|
மடையின்நெய்தல்
கருங்குவளை
செய்யமலர்த்
தாமரை
புடைகொள்செந்நெல் விளைகழனி
மல்கும்புக
லூர்தனுள்
தொடைகொள்கொன்றை புனைந்தானொர்
பாகம்மதி
சூடியை
அடையவல்லவர் அமருலகம்
ஆளப்பெறு
வார்களே. 3 |
2.
பொ-ரை: இதுவரை வாழ்ந்த நாளையும் இனி வாழும்
நாளையும்
அறிவீரேயானால் எம்பெருமானை ஏத்தாத நாள்கள் வீழ்ந்த நாட்கள்
என்றறிந்தும், எம்பெருமானை ஏத்தும் நல்லூழாகிய விதி இல்லாதவர்களே!
பிறை மதிசூடிய சடையினான்தன் புகலூரை மறவாது நினையும் உள்ளம்
உடையீர்களாயின் உங்கள் துயர் தீரும்.
கு-ரை:
உடம்பொடு உயிர்வாழ்வின் இறந்த காலத்தையும் அறிவீர்
எனில்:- ஆர் அறிவார் சாநாளும் வாழ்நாளும் (தி.1 ப.41 பா.3.) எம்
பெருமானை ஏத்தாத நாள் வாழ்ந்த நாளாகா. நின்திரு வருளே பேசின்
அல்லால் பேசாத நாளெல்லாம் பிறவாநாளே (தி.6 ப.47 பா.10). சூழ்ந்த-
ஆராய்ந்த.
3.
பொ-ரை: மடைகளில் நெய்தல், குவளை, செந்தாமரைமலர்
ஆகியன விளங்க, அருகில் செந்நெல் விளையும் வயல்களை உடைய
புகலூரில் தன்பாகத்தே கொன்றை மாலை சூடி மதிபுனைந்து உமையோடு
விளங்கும் சிவபிரானை அடைய வல்லவர் அமருலகு ஆள்வர்.
|