|
ஊணும்ஊரார்
இடுபிச்சை
யேற்றுண்டுடை கோவணம்
பேணுமேனும் பிரானென்ப
ரால்எம்பெரு மானையே. 7 |
2721.
|
உய்யவேண்டில்
எழுபோத
நெஞ்சேயுயர் இலங்கைக்கோன்
கைகளொல்கக் கருவரை
யெடுத்தானை யோர்விரலினால்
செய்கைதோன்றச் சிதைத்தருள
வல்லசிவன் மேயபூம்
பொய்கைசூழ்ந்த புகலூர்
புகழப் பொருளாகுமே. 8 |
2722.
|
நேமியானும்
முகநான்
குடையந்நெறி யண்ணலும்
ஆமிதென்று தகைந்தேத்தப்
போயாரழ லாயினான் |
கு-ரை:
ஊணும் ஊரார் இடுகின்ற பிச்சையுண்டி. உடையும்
கோவணம், பிச்சையைப்பேணும் (விரும்பும்) கோவணத்தைப் பேணும்.
எம்பெருமானையே பிரான் என்பர்.
8. பொ-ரை:
நெஞ்சே! உய்தி பெற வேண்டில் எழுக, போதுக;
உயரிய இலங்கைக்கு அரசனாகிய இராவணனை, கைகளால் கயிலை
மலையைப் பெயர்த்தவனை ஓர் விரலால் தன் வன்மை தோன்றச்
சிதைத்து அருளவல்ல சிவன் மேவிய, பூம் பொய்கை சூழ்ந்த புகலூரைப்
புகழ்ந்து போற்ற அதுவே அடைதற்குரிய மெய்ப் பொருள் ஆகும்.
கு-ரை:
நெஞ்சே! உய்யவேண்டுவையாயின் எழு. போத:- புகுத
என்பதன் மரூஉ. ஒல்க-தளர. புகழ்ந்தால் மெய்ப்பொருள் கிட்டும்.
9. பொ-ரை:
சக்கராயுதம் உடைய திருமாலும், நான்முகனும்
இதுவே ஏற்ற வழி எனக்கூறுபடுத்திப் பன்றியாயும் அன்னமாயும்
|