பதிக
வரலாறு:
அவயந்தியைப்
பணிந்த பாலறாவாயர், திருத்தொண்டர்
குழாத்தொடும், கற்றவர் வாழ் கடல் நாகைக்காரோணத்துக் கண்ணுதலைக்
கைதொழுது பாடிய சொற்றமிழ் மாலைகளுள் ஒன்று இத்திருப்பதிகம்.
பண்:
செவ்வழி
ப.தொ.எண்: 252
பதிக
எண்: 116
திருச்சிற்றம்பலம்
2725.
|
கூனல்திங்கட்
குறுங்கண்ணி
கான்றந்நெடு
வெண்ணிலா
ஏனற்பூத்தம் மராங்கோதை
யோடும்விரா
வுஞ்சடை
வானநாடன் அமரர்பெரு
மாற்கிட
மாவது
கானல்வேலி கழிசூழ்
கடல்நாகைக்
காரோணமே. 1 |
1.
பொ-ரை: வளைந்த பிறையாகிய சிறிய தலைமாலை,
ஒளி உமிழும்
வெண்ணிலவில் குறிஞ்சி நிலத்தில் தினைக்கொல்லையில் பூத்த கடம்பமலர்
மாலை ஆகியவற்றைப் புனைந்த சடையை உடைய வானநாடனும், அமரர்
பெருமானும் ஆகிய இறைவற்கு இடமாவது சோலைகளை வேலியாகக்
கொண்டதும் உப்பங்கழிகளை உடையதுமாகிய கடல்நாகைக்காரோணமாகும்.
கு-ரை:
கூனல்திங்கட் குறுங்கண்ணி:- வளைந்த பிறையாகிய
சிறியதலைமாலை.
ஏனல்-தினை.
மராங்கோதை-கடம்பலர் மாலை. வான நாடன்; அமரர்
பெருமான் (தி.3 ப.118 பா.4 ; தி.7 ப.25 பா.2; தி.81 ப.1 பா.5 தி.39 ப.3)
|