பக்கம் எண் :

1128

2732.







பத்திரட்டி திரடோ
     ளுடையான் முடிபத்திற
வத்திரட்டி விரலா
     லடர்த்தார்க் கிடமாவது
மைத்திரட்டிவ் வருவெண்டிரை
     மல்கிய மால்கடல்
கத்திரட்டுங் கழிசூழ்
     கடனாகைக் காரோணமே.     8
2733.







நல்லபோதில் லுறைவானு
     மாலுந் நடுக்கத்தினால்
அல்லராவ ரெனநின்ற
     பெம்மாற் கிடமாவது
மல்லலோங்கிவ் வருவெண்டிரை
     மல்கிய மால்கடல்
கல்லலோதங் கழிசூழ்
     கடனாகைக் காரோணமே.     9


     கு-ரை: பொய்து வாழ்வு-பொள்ளலுடையதாகிய வாழ்வு. ஆர்-
பொருந்திய, வாழ்வாரும் சிந்தையாரும் எய்த வாழ்வாராகிய நக்கர்.
பொய்து வாழ்வார் மனத்தைப் பாழ்படுக்கும் பூசனை என்றலும்
பொருந்தும். பூசனை செய்து வாழ்வாரும் சிவன் சேவடிக்கே செலுஞ்
சிந்தையாரும் எய்த வாழ்பவர் நக்கர். கைதல் (-தாழை) என்பது
அருஞ்சொல். கைதல் சூழ்கழிக்கானல்’ (தி.3 ப.66 பா.2).

     8. பொ-ரை: இருபது தோள்களை உடைய இராவணனுடைய
பத்துத் தலைகளும் நெரியச் சிவந்த கால் விரல்களால் அடர்த்த
பெருமானுக்குரிய இடம், கரிய மணலைத்திரட்டி வரும் வெண்திரைகளை
உடைய பெரியகடலைச் சூழ்ந்துள்ள கழிகள் ஒளிசிறந்து ஒலியெழுப்பும்
கடல் நாகைக்காரோணமாகும்.

     கு-ரை: பத்து இரட்டிதோள் - இருபது தோள்கள். அத்து -
சிவப்பு. மை திரட்டிவரு வெள்திரை எனப் பிரிக்க. கத்து - ஒளி.

     9. பொ-ரை: நல்ல தாமரை மலரில் உறையும் நான்முகனும்,
திருமாலும் நடுக்கத்தால் இவரே சிவபரஞ்சுடர் எனவும் அல்லர்