பதிக
வரலாறு:
பிள்ளையார்
திருவக்கரையை அணைந்து, முகங்களொடு திகழும்
மூர்த்தியை வணங்கிச்சென்று திருவிரும்பையுள்ளே மாகாளத்தைப் போற்றி
அச்செக்கர் மேனியாரைப் பாடியருளியது இத்திருப்பதிகம்.
பண்:
செவ்வழி
ப.தொ.எண்: 254
பதிக எண்: 117
திருச்சிற்றம்பலம்
2736.
|
மண்டுகங்கை
சடையிற்
கரந்தும் மதிசூடிமான்
கொண்டகையாற் புரமூன்
றெரித்த குழகன்னிடம்
எண்டிசையும் புகழ்போய்
விளங்கும் இரும்பைதனுள்
வண்டுகீதம் முரல்பொழில்
சுலாய்நின்ற மாகாளமே. 1 |
1.
பொ-ரை: கங்கையைச் சடையில் கரந்து, பிறைமதியைச்
சூடி,
மான் ஏந்திய கையால் கணைதொடுத்து முப்புரங்களை எரித்த குழகனது
இடம், எண்திசையும் புகழ்பெற்று விளங்கும் திருஇரும்பை நகரில் உள்ளதும்
வண்டுகள் இசைபாடி முரலும் பொழில் சூழ்ந்து விளங்குவதுமாகிய
திருமாகாளமாகும்.
கு.ரை:
கங்கைச்சடையன், பிறைசூடி, மானேந்தி, முப்புரமெரித்த
முதல்வன். திசையெலாம் பரவிய புகழுடைய தலம். மான் உமாதேவியுமாம்.
விற்றாங்கி
யகரம் வேல்நெடுங்கண்ணி வியன் கரமே (அப்பர்)
இசையால் திசைபோயது, சுலாய்-சுற்றி. ஊர் இரும்பை; கோயில் மாகாளம்.
|