பக்கம் எண் :

1142

2754.







கடுத்துவந்த கனன்மேனி
     யினான்கரு வரைதனை
எடுத்தவன்றன் முடிதோள்
     அடர்த்தார்க் கிடமாவது
புடைக்கொள்பூகத் திளம்பாளை
     புல்கும் மதுப்பாயவாய்
மடுத்துமந்தி யுகளுந்
     திலதைம் மதிமுத்தமே.      8
2755.







படங்கொணாகத் தணையானும்
     பைந்தா மரையின்மிசை
இடங்கொணால்வே தனுமேத்த
     நின்ற இறைவன்னிடம்
திடங்கொள்நாவின் இசைதொண்டர்
     பாடுந் திலதைப்பதி
மடங்கல்வந்து வழிபாடு
     செய்யும் மதிமுத்தமே.       9


அழகியதும், நீர்வற்றாத அரிசிலாற்றினால் சூழப்பெற்றதுமாகிய
திலதைப்பதியி லுள்ள மதிமுத்தமாகும்.

     கு-ரை: பெயர். அடையார்-பகைவர். செற்றவர்-அழித்தவர்.
பொற்றொடி ‘வேற்றுமைத் தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித்
தொகை. தேறல்-தேன். பொற்றொடி நாயகி என்னுந் தேவியார்
திருப்பெயரில் தொடி என்பது கொடி என்றாயிற்றோ?

     8. பொ-ரை: சினத்தோடுவந்த கார்மேகம் போலும் நிறத்தை
உடைய இராவணன் வலிய கயிலைமலையை எடுக்க, அவனுடைய
முடிதோள் ஆகியவற்றை அடர்த்த இறைவனது இடம், தழைத்து வளர்ந்த
பாக்குமரத்தின் இளம்பாறைவழியாய்ப் பாயும் தேனை உண்டு மந்திகள்
விளையாடும் திலதைப்பதியிலுள்ள மதிமுத்தமாகும்.

     கு-ரை: கனல்-தீ. பூகம்-பாக்கு மரம். மது-கள். மடுத்து-உண்டு.

     9. பொ-ரை: ஆயிரம் தலைகளை உடைய ஆதிசேடனைத் தன்
படுக்கையாகக்கொண்ட திருமாலும், புதியதாமரைமலரில் விளங்கி