பக்கம் எண் :

1143

2756.







புத்தர்தேரர் பொறியில்
     சமணர்களும் வீறிலாப்
பித்தர்சொன்னம் மொழிகேட்கி
     லாத பெருமானிடம்
பத்தர்சித்தர் பணிவுற்
     றிறைஞ்சுந் திலதைப்பதி
மத்தயானை வழிபாடு
     செய்யும் மதிமுத்தமே.      10
2757.



மந்தமாரும் பொழில்
     சூழ்திலதைம் மதிமுத்தமேற்
கந்தமாருங் கடற்காழி
     யுள்ளான் தமிழ்ஞானசம்


வேதங்களை ஓதும் நான்முகனும் வழிபட எழுந்தருளிய இறைவன்
இடம், தொண்டர்கள் திண்மையான நாவினால் இசை பாடித் தொழும்
திலதைப்பதியுள் சிங்கம் வந்து வழிபாடு செய்யும் மதிமுத்தமாகும்.

     கு-ரை: மடங்கல்:- இயமன், இடி, சிங்கம் என்பவற்றுள் ஒன்று
பூசித்த தலமாயிருந்தால்தான் சிங்கம் வந்து வழிபாடு செய்யும் மதிமுத்தம்
என்றிருக்கலாம்.

     10. பொ-ரை: புத்தர், தேரர், அறிவற்றசமணர், பெருமையில்லாத
பித்தர் ஆகிய புறச்சமயத்தார் கூறும் மொழிகளைக் கேளாத பெருமானது
இடம், அன்பர்களும் அறிஞர்களும் பணிந்து வழிபடும் திலதைப்பதியில்
மதயானைவந்து வழிபட்ட சிறப்புடைய மதிமுத்தமாகும்.

     கு-ரை: பொறி-அறிவு. வீறு இல்லாத பித்தர். பத்தர்-அன்பர். சித்தர்-
அறிஞர். யானை வழிபட்டதலம்.

     11. பொ-ரை: தென்றற்காற்று வீசும் சோலை சூழ்ந்த திலதைப்பதியுள்
விளங்கும் மதிமுத்தத்தில் எழுந்தருளிய இறைவன் மீது நறுமணம் கமழும்
கடற்கரையில் விளங்கும் காழி ஞான சம்பந்தன் பாடிய பாமாலையைப்
பழிதீர ஓதி வழிபடுபவர் சிவன் சேவடிகளைச் சிந்தை செய்பவராய்
அவ்வடிகளை அடைவது உறுதி.