|
பந்தன்மாலை
பழிதீர
நின்றேத்த
வல்லார்கள்போய்ச்
சிந்தைசெய்வார் சிவன்சேவடி
சேர்வது
திண்ணமே. 11 |
திருச்சிற்றம்பலம்
கு-ரை:
மந்தம்-மந்தமாய பொழில் (தி.2 ப.117. பா.11). கந்தம்-மணம்,
புலால் நாற்றம். பழிதீர நின்று மாலை ஏத்த.
திருஞானசம்பந்தர்
புராணம்
ஓங்குபுனற்
பேணு பெருந்துறையும் உள்ளிட்ட
பாங்கார் திலதைப் பதிமுற்ற மும்பணிந்து
வீங்கொலிநீர் வீழி மிழலையினில் மீண்டும்அணைந்(து)
ஆங்கினிது கும்பிட் டமர்ந்தொழுகும் அந்நாளில்.
-சேக்கிழார்.
|
பவானிகூடற்
புராணம்
பொய்கைவாய்த்
திருத்தோணி புரத்தமர்ந்தா
ரொடுஞ்சயிலப்
புனிதப் பாவை
கைகளால் திருமுலைப்பால் கறந்தூட்ட
அமுதுண்டு
கடல்சூழ் வைய
முய்கவான் சைவநெறி தழைத்தோங்க
அமணிருள்போ
யொழியச் சீர்சால்
வைகைநா டீடேற அருள்பொழியும்
கவுணியர்கோன்
மலர்த்தாள் போற்றி.
|
|