2761.
|
கூசநோக்காதுமுன்
சொன்ன
பொய்கொடு வினைகுற்றமும்
நாசமாக்கும் மனத்தார்கள்
வந்தாடு நாகேச்சரம்
தேசமாக்குந் திருக்கோயி
லாக்கொண்ட செல்வன்கழல்
நேசமாக்குந் திறத்தார்
அறத்தார் நெறிப்பாலரே. 4 |
2762.
|
வம்புநாறும்
மலரும்மலைப்
பண்டமுங் கொண்டுநீர்
பைம்பொன்வாரிக் கொழிக்கும்
பழங்காவிரித் தென்கரை
நம்பன்நாளும் அமர்கின்ற
நாகேச்சர நண்ணுவார்
உம்பர்வானோர் தொழச்
சென்றுடனாவதும்உண்மையே. 5 |
4.
பொ-ரை:
ஆராயாது பிறர் மனம் கூசுமாறு சொல்லும் பொய்,
கொடிய வினைகளால் வந்த குற்றங்கள் ஆகியவற்றைச் செய்யாத நன்மனம்
உடைய அடியவர்கள் வந்து மகிழும் நாகேச்சுரத்தை ஒளிவிளங்கும்
கோயிலாகக் கொண்ட செல்வன் திருவடிகளில் அன்புடையவர் அறநெறிப்
பாலராவர்.
கு-ரை:
கூசச்சொன்னபொய், நோக்காது சொன்னபொய். பொய்யும்
வினையும் குற்றமும் நாசம் ஆக்கும் மனத்தார்கள். ஆடுதல் -தீர்த்தமாடுதல்.
நேசம் - அன்பு. அறத்தார் - சிவ தருமமுடையவர். நெறிபாலர் -
வீட்டுநெறிக்கண் ஒழுகுபவர்.
5. பொ-ரை:
மணம் கமழும் மலர்களையும், மலைப் பொருள்களையும்
வாரிக்கொண்டு, பைம் பொன் கொழித்து வரும் நீரை யுடைய பழங்காவிரித்
தென்கரையில் நம்பன் நாளும் அமர்கின்ற நாகேச் சரத்தை நண்ணுபவர்
உம்பர் வானவர் தொழச் சிவபிரானோடு ஒன்றாவர்.
கு-ரை:
உம்பரும் வானோரும், உடனாவது-அத்துவித
|