2763.
|
காளமேகந்
நிறக்கால
னோடந்தகன்
கருடனும்
நீளமாய்நின் றெய்தகாமனும்
பட்டன
நினைவுறின்
நாளுநாதன் அமர்கின்ற
நாகேச்சர
நண்ணுவார்
கோளுநாளுந் தீயவேனும்
நன்காங்
குறிக்கொண்மினே. 6 |
2764.
|
வேயுதிர்முத்
தொடுமத்த
யானை
மருப்பும்விராய்ப்
பாய்புனல்வந் தலைக்கும்
பழங்காவிரித்
தென்கரை
நாயிறுந்திங் களுங்கூடி
வந்தாடு
நாகேச்சரம்
மேயவன்றன் அடிபோற்றி
யென்பார்
வினைவீடுமே. 7 |
முறுவது ஒன்றாய் வேறாய்
உடனாதல். அஃது ஈண்டு ஆன்மாச்
சிவனுடனாதலை உணர்த்திற்று.
6.
பொ-ரை: கரிய நிறமுடைய காலன், அந்தகன்,
கருடன், விலகி
நின்று கணை எய்த காமன் ஆகியோரை இறைவன் செற்றதை நினைந்து
நாள்தோறும் சிவபிரான் உறையும் நாகேச்சுரத்தை நண்ணி வழிபடுபவர்க்குக்
கோள்களும் நாள்களும் தீயவேனும் நல்லன ஆகும். அதனை மனத்தில்
கொள்மின்.
கு-ரை:
காளம்-கருமை. காலன் அந்தகன் என்னும் இருவரும்
வெவ்வேறு ஆவர். கருடன் பட்டது:- இத்தலத்தில் ஐந்தலைப் பாம்பின்
பணிகொண்டு கருடனைச் செற்ற வரலாறு குறித்தது. அடுத்த குறிப்பிற்
காண்க. மாநாகம் அருச்சித்த மலர்க்கமலத்தாள் (பெரிய .2310).
கோள்களும் நாள்களும் தீயன எனினும் நல்லன ஆகும்.
7.
பொ-ரை: மூங்கில் முத்துக்கள், யானைமருப்பு
ஆகியவற்றுடன்
வந்து வளம் செயும் காவிரியாற்றின் தென்கரையில், நாயிறு, திங்கள்
இரண்டும் வந்து வழிபடும் நாகேச்சுரத்தில் எழுந்தருளிய,
|