பக்கம் எண் :

1149

2765.







இலங்கைவேந்தன் சிரம்பத்தி
     ரட்டியெழிற் றோள்களும்
மலங்கிவீழம் மலையால்
     அடர்த்தா னிடமல்கிய
நலங்கொள்சிந்தை யவர்நாள்தொறும்
     நண்ணும் நாகேச்சரம்
வலங்கொள்சிந்தை யுடையார்
     இடராயின மாயுமே.       8
2766.







கரியமாலும் மயனும்
     மடியும்முடி காண்பொணா
எரியதாகிந் நிமிர்ந்தான்
     அமரும்இட மீண்டுகா
விரியின்நீர்வந் தலைக்குங்
     கரைமேவு நாகேச்சரம்
பிரிவிலாதவ் வடியார்கள்
     வானிற் பிரியார்களே.     9


இறைவன் திருவடிகளைப் போற்றி என வணங்குவார் வினைகள் கெடும்.

     கு-ரை: ஞாயிறு-சூரியன். சூரிய சந்திரர் வழிபட்ட தலம்.
‘சந்திரன்னொடு சூரியர் தாம் உடன் வந்து சீர்வழிபாடுகள் செய்தபின்
ஐந்தலையரவின் பணிகொண்டருள் மைந்தர்போல் மணி நாகேச்சுரவரே’
(தி.5 ப.52 பா.4). வீடும்-அழியும்.

     8. பொ-ரை: இலங்கை வேந்தனாகிய இராவணனின் பத்துத் தலைகள்
இருபது தோள்கள் ஆகியன சிதையுமாறு மலையினால் அடர்த்த இறைவன்
இடம் ஆகிய நன்மைகெழுமிய மனமுடையோர் நாள்தோறும் நண்ணி
வழிபடும் நாகேச்சுரத்தை வலம் வந்து வழிபடும் சிந்தை உடையவர்களின்
இடர்கள் கெடும்.

     கு-ரை: வீழ அடர்த்தான், சிந்தைக்கு நலம் தியாகபலம், வலம் -
திருக்கோயிலைச் சூழ்தல்.

     9. பொ-ரை: கருநிறமுடைய திருமாலும், பிரமனும் அடிமுடி காண
இயலாதவாறு எரியுருவாக நிமிர்ந்த இறைவன் அமரும் இடம்