2794.
|
திரியு
மூன்று புரமும் எரித்துத்
திகழ்வானவர்க்
கரிய பெம்மான் அரவக் குழையார்க்
கிடமாவது
பெரிய மாடத் துயருங் கொடியின்
மிடைவால்வெயிற்
புரிவி லாத தடம்பூம் பொழில்சூழ்
தண்புகலியே.
4 |
அணிந்த ஒளி மயமான
தொல்சடை முடியினரும், ஆகிய சிவபெருமானுக்கு
இடமாக விளங்குவது கெண்டை மீன்கள் துள்ளி ஆடும் மடுக்களையும்,
தாழை, மாதவி மரங்களையும், தாமரை மலரும் பொய்கைகளையும் கொண்ட
புகலியாகும்.
கு-ரை:
மங்கை-உமாதேவியார். அவர் குழலில் வண்டுகள் வாழும்
என்றது சாதியடை. மதித்துண்டம்-பிறை. திங்கட் பிளவு. சுடர்ச்சடை,
தொல்சடை என்க. தொல்சடை என்னும் பண்பு தொகு மொழி, சுடர்
என்னும் அடைகொண்டதாதலின், சுடரை (-ஒளியை) உடைய தொல்சடை
என விரிக்க. தொல்சடை என்பதைப் பிரித்துப் புணர்ச்சி விதி கூறலாகாது
என்பதை, ஐம்பாலறியும் பண்பு தொகு மொழியும். . . தொழில்
தொகுமொழியும்........ பிறவும்.......மருவின் பாத்திய, புணரியல் நிலையிடை
உணரத்தோன்றா என்ற தொல்காப்பியச் சூத்திரத்தால் (எழுத்து, 482)
உணர்க. கேததகை-தாழை. மாதவி-குருக்கத்திக்கொடி. புண்டரீகம்-தாமரை.
பொய்கை-மானுட ராக்காத நீர்நிலை (சிந்தாமணி. 337.)
4.
பொ-ரை: வானத்தில் திரிந்து இடர்விளைத்த முப்புரங்களை
எரித்தவனும் வானவர்க்கு அரியவனாய் விளங்குவோனும், அரவக் குழை
அணிந்தவனுமாகிய சிவபெருமானுக்கு இடமாக விளங்குவது, பெரிய
மாடவீடுகளில் விளங்கும் கொடிகளால் வெண்மையான வெயிலொளி
புகாததாய், தடம் பொய்கைகள் சூழ்ந்ததாய் விளங்கும் புகலியாகும்.
கு-ரை:
அளவறுப்பதற்கு அரியவன் இமையவர்க்கு (திருவாசகம்.
திருச்சதகம் 35) அரவக்குழையார்-சர்ப்ப குண்டலம் அணிந்தவர்.
மிடைவால்-நெருக்கத்தால், வெயில் புரிவு இலாத-வெயிலைச் செய்தலின்றி
நிழலைச் செய்தலுடைய. தட-பெரிய. பூம்பொழில்-மலர்க்கா.
|