|
நீண்ட
நாரை யிரையாரல் வாரநிறை
செறுவினிற்
பூண்டு மிக்கவ் வயல்காட்டும் அந்தண்
புகலியே. 9
|
2779.
|
தடுக்கு
டுத்துத் தலையைப் பறிப்பாரொடு
சாக்கியர்
இடுக்க ணுய்ப்பா ரிறைஞ்சாத வெம்மாற்
கிடமாவது
மடுப்ப டுக்குஞ் சுருதிப்பொருள் வல்லவர்
வானுளோர்
அடுத்த டுத்துப் புகுந்தீண்டு மந்தண்
புகலியே.
10
|
காண்போம் எனச்சூளுரைத்து
முயன்று தோற்றுக் கழல்பணிய
நின்றார்க்கு இடமாக விளங்குவது, நாரைக்கு இரையான ஆரல் மீன்கள்
ஒழுகி ஓட, நிறைந்த சேற்றோடு விளங்கும் வயல்களை உடைய அழகிய
புகலிப்பதியாகும்.
கு-ரை:
கீண்டு-(நிலத்தைப்) பிளந்து. திருமால் செயல். கேழல்-
பன்றி. காண்டும்-காண்போம். பறந்துயர்ந்தார். பிரான் திருவடிகளை,
பணிய- பணிந்து வழிபட. நின்றார்க்கு-நின்ற சிவபெருமானுக்கு. நாரைக்கு
இரையாகிய ஆரல் மீன்கள் ஒழுகியோட, நிறைந்த செறு. செறு-சேறு.
மிக்கவயல் என்பது சந்தம் நோக்கி விரித்தல் விகார முற்றது.
10.
பொ-ரை: ஓலையால் இயன்ற தடுக்கைக் கட்டிக் கொண்டும்
தலையைப் பறித்துக் கொண்டும் வாழும் சமணர்களும், சாக்கியர்களும்
இடுக்கண்பட்டவராய் இறைஞ்சாது நிற்குமாறு செய்த எம்பெருமானுக்கு
உரிய இடமாக விளங்குவது, வேதம் வல்ல அந்தணரும் வானுலகில்
வாழும் தேவர்களும் அடுத்தடுத்து வந்து வழிபடும் புகலிப்பதியாகும்.
கு-ரை:
பறிப்பார்-சமணர். உய்ப்பார்-செலுத்துவார், உண்டாக்குவார்
என்றவாறு. இறைஞ்சாத-தலைவணங்காத. வணங்கப் பெறாமை எம்மானது.
மடுப்படுக்கும் - (வைகறையில் நீர்) மடுவில்
|