பக்கம் எண் :

28

இத்தலப்பதிகத்தில் குறிக்கின்றார்.

     சீதையைக் கவர்ந்து சென்ற இராவணனோடு போரிட்ட
சடாயுவோடு, சம்பாதி என்னும் பறவை அரசும் பூசித்த தலம் இது
என்பதனை, “கள்ளார்ந்த பூங்கொன்றை.......”என்னும் திருப்பதிகப்
பாடல்களில்,

“தள்ளாய சம்பாதி சடாயென்பார் தாம் இருவர்
 புள்ளானார்க்கு அரையனிடம் புள்ளிருக்கு வேளூரே”

                                  (தி. 2 ப. 43 பா.1)

“யோசனைபோய்ப் பூக்கொணர்ந்துஅங்கு ஒருநாளும் ஒழியாமே
 பூசனைசெய் தினிதிருந்தான் புள்ளிருக்கு வேளூரே”

                                  (தி. 2 ப. 43. பா. 3)

என்று குறிக்கின்றார். இருக்குவேதம் பூஜித்தது என்னும் கருத்தினை,

“வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப்
 போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வேளூரே”

                                  (தி. 2 ப. 43 பா. 5)

என்று இயம்புகிறார். சடாயு என்னும் பறவை இராவணனோடு போரிட்டது
என்னும் இராமாயண வரலாற்றுக் குறிப்பினை, இப்பதிகத்தின் இரண்டாவது
பாடலில்,

“மெய் சொல்லா இராவணனை மேலோடி ஈடழித்துப்
 பொய் சொல்லாது உயிர்போனான் புள்ளிருக்குவேளூரே”

                                  (தி. 2 ப. 43 பா. 2)

என்று குறிக்கிறார். இப்பெருமான் பண்ணிசை பாடுவோர்க்கு மண்ணுலக
வாழ்வோடு விண்ணுலக வாழ்வும். வழங்குபவன் என்பதனை, 8-ஆவது
பாடலில்,

“பண்ணொன்ற இசைபாடும் அடியார்கள் குடியாக  
 மண்ணின்றி விண்கொடுக்கும் மணிகண்டன்”

                                  (தி. 2 ப. 43 பா. 8)

என்றும், 11-ஆவது பாடலில்,