பக்கம் எண் :

303

 5. திருஅனேகதங்காவதம்

பதிக வரலாறு:

     பாடிய சமயம் எழுதப்பட்டிலது.

                      பண்: இந்தளம்

ப. தொ. எண்: 141   பதிக எண்: 5

                     திருச்சிற்றம்பலம்

1513.



நீடன் மேவுநிமிர் புன்சடை மேலொர் நிலாமுளை
சூடன் மேவுமறை யின்முறை யாலொர் சுலாவழல்
ஆடன் மேவுமவர் மேயவ னேகதங் காவதம்
பாடன் மேவுமனத் தார்வினை பற்றறுப் பார்களே.  1
1514.



சூல முண்டுமழு வுண்டவர் தொல்படை சூழ்கடல்
ஆல முண்டபெரு மான்ற னனேகதங் காவதம்
நீல முண்டதடங் கண்ணுமை பாகநிலாயதோர்
கோல முண்டள வில்லை குலாவிய கொள்கையே.   2


     1. பொ-ரை: நீண்டுயர்ந்த சடைமுடிமீது பிறைமதியைச் சூடியவராய்
வேத விதிப்படி வளர்க்கப்பெற்றுச் சுழன்றெரியும் தீயில் ஆடு தலை
விரும்பும் இறைவர் உறையும் அனேகதங்காவதம் என்னும் தலத்தைப்
பாடுதலை விரும்பும் மனத்தினராய பக்தர்கள் வினைகளையும் அவற்றால்
விளையும் பற்றுக்களையும் அறுப்பர்.

     கு-ரை: நீடல்- (நீள் + தல்) நீளல். நீடுமாம், நிமிர்தல் - உயர்தல்.
புன்மை-மென்மை, பொன்மையுமாம், நிலாமுளை - பிறையாகிய முளை.
சூடல் - சூடுதல். மறையின்முறை - வேதவிதி சுலாவு அழல் -
சுழன்றெரியுந்தீ. அழலாடல் - தீயிலாடுதல் அநேகதங்காபதம் -
வடநாட்டிலுள்ள தொருமலை, பாடல் - பாடுதலை. மேவும் - விரும்பும்
வினைபற்று - வினையும் அதனால் வரும் பற்றும். உம்மைத்தொகை.

     2. பொ-ரை: சூலத்தையும் மழுவையும் படைக்கலங்களாகக்
கொண்டு, உலகைச் சூழ்ந்துள்ள ஆழமான கடலில் தோன்றிய விடத்தை
உண்டு உலகைக் காத்தருளிய பெருமான், அனேகதங்காவதத்தில் நீலநிறம்
பொருந்திய பெரிய கண்களையுடைய