1533.
|
மாலுஞ்
சோதி மலரானு
மறிகிலா வாய்மையான்
காலங் காம்பு வயிரங்
கடிகையன் பொற்கழல்
கோல மாய்க்கொழுந் தீன்று
பவளந் திரண்டதோர்
ஆல நீழலு ளானுமை
யாறுடை யையனே. 10
|
1534.
|
கையி
லுண்டுழல் வாருங்
கமழ்துவ ராடையான்
மெய்யைப் போர்த்துழல் வாரு
முரைப்பன மெய்யல |
அரைசெய் மேகலையான்
- மேகலாபரணம் இடுப்பிற் கொண்டவன்,
மேகலை-பொன்னாடை விசேடம். எண்கோவை மேகலை.
10.
பொ-ரை: ஐயாறுடைய ஐயன் திருமாலும் நான்முகனும் அறிய
இயலாத சத்திய வடிவானவன். அவனது கால் போலத் திரண்ட அழகிய
காம்பினையும் கழல் போன்ற கொழுந்தினையும் பவளம் போன்ற
பழங்களையும் ஈன்ற திரண்ட கல்லால மரநிழலில் எழுந்தருளியுள்ளான்.
கு-ரை:மால்
- (மயக்கம்) விண்டு. சோதிமலர் - தாமரைப்பூ.
வாய்மையான் - சத்தியசொரூபி. காலம் காம்பு வயிரம் கடிகையன்
என்பதன் பொருள் புலப்பட்டிலது. ஆயினும் ஒருவாறு எழுதலாம். கால்
-திருவடி, அம் காம்பு - அழகிய காண்பு, வயிரம் - வைரரத்னம், கடிகை
-துண்டு, கால்போலக் காம்பு, கழல்போலக் கொழுந்து. கடிகையம்
பொற்கழல் என்றிருந்தது போலும். ஆலமரம் இறைவனது பொற்கழல்போலப்
பொன்மையும் மென்மையும் ஒளியும் அழகும் உடைய கோலமாய்க்
கொழுந்தீன்று என்க. ஈன்று - தோன்றி. ஆலம்பழம் செந்நிறமுடையது
ஆதலின், பவளம் திரண்டதோர் ஆலம் என்றார். பவளம்போன்ற செந்நிறம்
உடைய பழங்களைப் பவள மென்றது உவமையாகு பெயர். கல்லாலுக்குச்
சாதியடை.
11.
பொ-ரை: கையில் உணவை வாங்கி உண்டு உழலும் சமணரும்,
நாற்றம் அடிக்கும் துவராடையால் உடலைப் போர்த்துத்
|