பதிக
வரலாறு:
காழிவேந்தர்,
தவமுனிவரான சொல்வேந்தரோடும் கூடச் சிவதலங்கள்
வணங்கப்போவாராய், தென்திருவாஞ்சிய மூதூர் சென்று சேர்ந்து அங்கு
எழுந்தருளிய முக்கண் நீலமிடற்றரு மணியை வணங்கிப் போற்றி, வன்னி
கொன்றை எனும் இத்திருப்பதிகத்தைப்பாடி அத்திருவாஞ்சியத்து என்றும்
நின்ற இறையானை உணர்ந்து அடி ஏத்தினார்.
பண்:
இந்தளம்
ப.தொ.எண்:
143 |
|
பதிக
எண்: 7 |
திருச்சிற்றம்பலம்
1536.
|
வன்னி
கொன்றைமத மத்த
மெருக்கொடு கூவிளம்
பொன்னி யன்றசடை யிற்பொலி
வித்தபு ராணனார்
தென்ன வென்றுவரி வண்டிசை
செய்திரு வாஞ்சியம்
என்னை யாளுடை யானிட
மாக வுகந்ததே. 1
|
1. பொ-ரை:
வன்னியிலை கொன்றைமலர் ஊமத்தம் மலர் வில்வம்
ஆகியவற்றைப் பொன்போன்ற தம் சடையில் சூடிய பழமையாளரும்,
என்னை அடிமையாகக் கொண்டவரும் ஆகிய சிவபிரான் தமது
இருப்பிடமாகக் கொண்டு விரும்பிய ஊர், வரிவண்டுகள் தென்ன என்ற
ஒலிக் குறிப்போடு இசைபாடும் திருவாஙசியமாகும்.
கு-ரை:
வன்னி - வன்னிமரத்திலை, கொன்றைப்பூ, ஊமத்தம் மலர்,
எருக்கம்பூ. கூவிளம் - வில்வம் பொன் இயன்ற - பொன் போன்ற சடையில்
வன்னி முதலிய வற்றைப் பொலிவு பெறச் சூடிய புராணனார். புராணன்-
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப்பழம் பொருளா யுள்ளவன்.
தென்ன என்று இசை செய்வன வரிவண்டுகள். உகந்தது-விரும்பியது (வினையாலணையும் பெயர்),
மேலும் இவ்வாறாதல் அறிக.
|