பக்கம் எண் :

327

1543.







மாட நீடுகொடி மன்னிய
     தென்னிலங் கைக்குமன்
வாடியூ டவரை யாலடர்த்
     தன்றருள் செய்தவர்
வேட வேடர்திரு வாஞ்சிய
     மேவிய வேந்தரைப்
பாட நீடுமனத் தார்வினை
     பற்றறுப் பார்களே.          8
1544.



செடிகொ ணோயினடை யார்திறம்
     பார்செறு தீவினை
கடிய கூற்றமுங் கண்டக
     லும்புகல் தான்வரும்


    கு-ரை: பிறை - பிறத்தலுடையது என்னுங் காரணப் பொருட்டான
பெயர். ‘திங்கட்டுண்டம்’ அநங்கன் - அங்கமில்லான். உருவிலி, மன்மதன்.
பண்ணும் இசையும் முறையே ஆதாரமும் ஆதேயமுமாதலின் பண்ணில்
ஆன இசை என்றார். போற்ற வல்லார் - போற்றுதலில் வேதாகம
ஞானவல்லபம் உடையவர். நிஷ்டாநுபூதிமான்கள். அல்லல் -துன்பம்.

    8. பொ-ரை: நீண்ட கொடிகள் நிலைத்துள்ள மாடவீடுகளைக்
கொண்ட தென்னிலங்கைக்கு அரசனாகிய இராவணன் வாடி வருந்தக்
கயிலை மலையால் அவனை அடர்த்துப்பின் அருள்செய்தவர்; அருச்சுனன்
பொருட்டு வேட்டுவக் கோலம் தாங்கியவர். திருவாஞ்சியத்துள் எழுந்தருளிய
வேந்தர். அவ்விறைவரைப்பாட எண்ணுவார், வினை, பற்று ஆகியன நீங்கப்
பெறுவர்.

    கு-ரை: மாடம் - உயரிய வீடுகள். கொடி - துகிற்கொடிகள்.
மன்னிய-நிலைத்த. மன் - அரசன். இராவணன். வரை - கைலாசகிரி.
வேடவேடர் - வேட்டுவக்கோலத்தர். வினை பற்று உம்மைத்தொகை.
வினை - கர்மம். பற்று - மூலகர்மம். “இருவினைப் பாசமும் மலக்கல்
ஆர்த்தலின் வருபவக் கடலில்வீழ் மாக்கள்” (பெரிய. அப்பர். 129)
என்புழியறிக.

    9. பொ-ரை: நீண்டுயர்ந்த திருமாலும் பிரமனும் தம்மை
வணங்குமாறு ஓங்கிநின்ற திருவாஞ்சியத்து அடிகளாகிய சிவபிரான்