பக்கம் எண் :

351

1579.



மந்த மாம்பொழில் சூழ்மங் கலக்குடி மன்னிய
எந்தை யையெழி லார்பொழிற் காழியர் காவலன்
சிந்தை செய்தடி சேர்த்திடு ஞானசம் பந்தன்சொல்
முந்தி யேத்தவல் லாரிமை யோர்முத லாவரே.     11

                     திருச்சிற்றம்பலம


பொய்யுரைகளை விட்டுச் சைவ சமய உண்மைகளை உணரும்
புண்ணியர்கள் வாழும் திருமங்கலக்குடியில், சிவந்த திருமேனியனாய்ச்
செழுமையான கங்கை நதி செறிந்த சடையினனாய் விளங்கும் தலைவன்
சேவடிகளை ஏத்த வல்லார்க்கு, அழகிய பேரின்ப வாழ்வு அமையும்.

     கு-ரை: மெய்யின் மாசு-உடலழுக்கு. சமணர் சாக்கியர் ஆகிய
பரசமயத்தவர் பொய்யுரைகளை விட்டுச் சைவ உண்மையை
உணர்ந்தொழுகுவோர் புண்ணியர். அத்தகையவர் சேர்ந்துறையும் புகழ்
மங்கலக்குடிக்குள்ளது.

     செய்யமேனி-‘சிவனெனும் நாமம் தனக்கே யுடைய செம்மேனி
எம்மான்’ புனல்-வெள்ளம். ஐயன்-பரத்துவக் கடவுள். சேவடி-சிவந்த
திருவடி. சிவஞானப் பிரகாசம். அழகு-பேரின்ப வாழ்வு.

     11. பொ-ரை: தென்றற் காற்றைத்தரும் பொழில்கள் சூழ்ந்த
திருமங்கலக்குடியில் நிலைபெற்றுள்ள எம் தந்தையாகிய சிவபிரானை
அழகிய பொழில் சூழ்ந்த காழிப்பதியின் தலைவனாகிய ஞானசம்பந்தன்,
சிந்தித்து அவன் திருவடிகளைச் சேர்க்கவல்லதாகப் பாடிய இத்திருப்பதிக
வாய்மொழியை அன்புருக ஏத்த வல்லவர், இமையோர் தலைவர் ஆவர்.

     கு-ரை: மந்தம்-தென்றல் (வீசுதல்). மன்னிய-நிலைபெற்ற. எழில்-
அழகு. இத்திருப்பதிகம் திருவடியிற் சேர்க்க வல்லது, சிந்தை செய்தல்
சேர்த்திடற்கும் ஏத்தற்கும் பொருந்துதலறிக. இமையோர் முதல்-தேவர்
கோமகன்.