பதிக
வரலாறு:
பாலறாவாயர்
வேதிகுடியினில் தமிழ்வேதத்தின் ஓங்கிசையை ஓதி,
முதல்வரைப் போற்றித் தொழுதுவந்து, திருவெண்ணிப்பதியினிற் கோயிலை
நண்ணிக் காதலின் வணங்கி, சடையானை எனும் இப்பதிகத்தைப் பாடினார்.
பண்:
இந்தளம்
ப.தொ.
எண்: 150 |
|
பதிக
எண்: 14 |
திருச்சிற்றம்பலம்
1612.
|
சடையானைச்
சந்திர னோடுசெங் கண்ணரா
உடையானை யுடைதலை யிற்பலி கொண்டூரும்
விடையானை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியை
உடையானை யல்லதுள் காதென துள்ளமே. 1 |
1613.
|
சோதியைச்
சுண்ணவெண் ணீறணிந் திட்டவெம்
ஆதியை யாதியு மந்தமு மில்லாத |
1. பொ-ரை:
சடையின்மேல் சந்திரனையும் சிவந்த கண்களை
உடைய பாம்பையும் உடையவன். உடைந்த தலையோட்டில் பலிஏற்று,
ஊர்ந்து செல்லும் விடைமீது ஏறி வருபவன். தேவர்களால் வணங்கப்படும்
திருவெண்ணி என்னும் தலத்தைத் தனக்கு ஊராக உடையவன்.
அவனையன்றிப் பிறரை நினையாது என் உள்ளம்.
கு-ரை:
சடையானை என்றதன் பின் கூறியதால், சந்திரனையும்
சிவந்த கண்களையுடைய பாம்பையும் அச்சடைமேல் உடையான் என்க.
அரா - பாம்பு. உடைதலை - உடைந்த தலை, பிரமகபாலம். ஊரும்விடை -
ஏறிச் செலுத்தப்படும் எருது. விண்ணவர் - தேவர். வெண்ணி: - வென்றி
என்பதன் மரூஉ. நன்றி - நண்ணி. பன்றி-பண்ணி, மன்று - மண்ணு,
கன்று - கண்ணு என்பனைவற்றிலுள்ள னகரமும் றகரமும் உற்ற
திரிபைநோக்குக. உள்காது - நினையாது.
2. பொ-ரை:
ஒளி வடிவினன் வெண்ணீற்றைச் சுண்ணமாக அணிந்த
எம் தலைவன். முதலும் முடிவும் இல்லாத மறையோன்.
|