பக்கம் எண் :

377

1621.



குண்டருங் குணமிலா தசமண் சாக்கிய
மிண்டர்கண் மிண்டவை கேட்டுவெகு ளன்மின்
விண்டவர் தம்புர மெய்தவன் வெண்ணியில்
தொண்டரா யேத்தவல் லார்துயர் தோன்றாவே.   10
1622.




மருவாரு மல்குகா ழித்திகழ் சம்பந்தன்
திருவாருந் திகழ்தரு வெண்ணிய மர்ந்தானை
உருவாரு மொண்டமிழ் மாலையி வைவல்லார்
பொருவாகப் புக்கிருப் பார்புவ லோகத்தே.      11

                    திருச்சிற்றம்பலம்


கண்’ என்பதனால், ‘வானவர்க்கும் மனிதர்க்கும் கண்ணினை’ என்றார்.
‘பெண்ணவன்காண். . . . எல்லாம் காணும் கண்ணவன்காண்’ (தி.6 ப.48
பா.7) ‘கலைபயில்வோர் ஞானக்கண் ஆனான்கண்டாய்’ (தி.6 ப.73. பா.2)
விண் - திருச்சிற்றம்பலம். அண்ணல் - முன்னைப் பழம் பொருட்கும்
முன்னைப் பழம்பொருள். அல்லல் - பிறவித் துன்பம், இம்மையில் உறும்
துயரம் எல்லாம்.

     10. பொ-ரை: குண்டர்களாகிய சமண புத்த மதத்தைச் சேர்ந்த
மிடுக்குடையோரின் மிடுக்கான உரைகளைக்கேட்டு நம் சமய நெறிகளை
வெறாதீர்கள். பகைவர் முப்புரங்களை எய்தவனாகிய திருவெண்ணியில்
உறையும் இறைவனுக்குத் தொண்டு பூண்டு அவனை அடைய வல்லார்க்குத்
துயர்கள் தோன்றா.

     கு-ரை: குண்டர் - கற்குண்டுபோலக் கட்டமைந்த உடம்பினர்.
சமணர், சாக்கியர், மிண்டர் - மிடுக்குடையவர். மிண்டவை - அதிக
பிரசங்கம் வெகுளேல்மின் - சைவாகமப்பொருள் உண்மைகளைக்
கோபித்து அலட்சியம் செய்யாதீர்கள். எதிர்மறைப் பன்மையேவல். ‘மின்’
பன்மை விகுதி, அது நீங்கின் ஒருமையாதல் தெரியும். விண்டவர் -பகைவர்.

     11. பொ-ரை: மணம் பொருந்தியதும் பெரியோர் நிறைந்ததுமான
காழிப்பதியில் தோன்றி விளங்கும் ஞானசம்பந்தன், செல்வம் நிறைந்து
திகழும் திருவெண்ணியில் அமர்ந்த இறைவனைப் போற்றிப் பாடிய
ஞானவடிவாக விளங்கும் இத்தமிழ் மாலையை ஓதவல்லவர் மண்ணுலகினும்
மேம்பட்ட சிவலோகத்தை அடைந்து இனிது வாழ்வர்.