பதிக
வரலாறு:
திருவைந்
தெழுத்தின் மெய்ம்மையை உணர்ந்த
பிள்ளையார், திருவாரூர்ப் புற்றிடங்கொண்டாரைப் போற்றிப் பணிந்து
வைகுங்காலத்தில், வலிவலம் கோளிலி முதலாம் பதி பலவற்றுள்
ஒன்றான இத்திருக்காறாயிலை வணங்கிப் பாடியது இப்பதிகம்.
பண்:
இந்தளம்
ப.
தொ. எண்:151 |
|
பதிக
எண்: 15 |
திருச்சிற்றம்பலம்
1623.
|
நீரானே
நீள்சடை மேலொர்நி ரைகொன்றைத்
தாரானே தாமரை மேலயன் றான்றொழும்
சீரானே சீர்திக ழுந்திருக் காறாயில்
ஊரானே யென்பவ ரூனமி லாதாரே. 1
|
1624.
|
மதியானே
வரியர வோடுடன் மத்தஞ்சேர்
விதியானே விதியுடை வேதியர் தாந்தொழும்
நெதியானே நீர்வயல் சூழ்திருக் காறாயிற்
பதியானே யென்பவர் பாவமிலாதாரே. 2 |
1.
பொ-ரை:
நீண்ட சடைமுடிமீது ஒப்பற்ற கங்கையை அணிந்தவன்.
வரிசையாகத் தொடுக்கப்பட்ட கொன்றை மாலையைச் சூடியவன். தாமரை
மலரில் எழுந்தருளிய பிரமனால் வணங்கப்படும் புகழாளன் சீர் விளங்கும்
திருக்காறாயில் எனப்படும் ஊரினன். இவ்வாறு அவனைப் போற்றிக்
கூறுவார் குற்றம் இலராவர்.
கு-ரை:
நீள்சடை மேல்நீரான் - நீண்ட சடையின்மேல் கங்கை
நீரையுடையவன், நிரை - வரிசை. தார் - மாலை தாமரைமேல் அயன்
-செந்தாமரையில் அமர்ந்திருக்கும் பிரமன். அயன் அஜன், தோன்றாதவன்
என்பது அடிச்சொற்பொருள். சீரான் - மேன்மையை உடையவன். ஊனம் -
பிறவி முதலிய குறைகள்.
2.
பொ-ரை: பிறைமதியைச் சூடியவன். வரிகளை உடைய
பாம்போடு ஊமத்தம் மலர் முதலியவற்றை அணிந்து நமக்கு ஊழை
|