பதிக
வரலாறு:
137 - ஆவது
பதிகத் தலைப்பிற் காண்க.
பண்:
இந்தளம்
ப.
தொ. எண்: 153 |
|
பதிக
எண்: 17 |
திருச்சிற்றம்பலம்
1645.
|
நிலவும்
புனலும் நிறைவா ளரவும்
இலகுஞ் சடையார்க் கிடமா மெழிலார்
உலவும் வயலுக் கொளியார் முத்தம்
விலகுங் கடலார் வேணு புரமே. 1 |
1646.
|
அரவார்
கரவன் னமையார் திரள்தோள்
குரவார் குழலா ளொருகூ றனிடங்
கரவா தகொடைக் கலந்தா ரவர்க்கு
விரவா கவல்லார் வேணு புரமே. 2 |
1. பொ-ரை:
பிறை, கங்கை, மிகக் கொடிய நாகம் ஆகியன
விளங்கும் சடையினை உடைய சிவபெருமானுக்கு இடம், அழகிய மகளிர்
உலாவுவதும், ஒளிபொருந்திய முத்துக்கள் வயல்களில் விளங்குவதும், விலகி
உள்ள கடற்கரையை அடுத்துள்ளதுமான வேணுபுரம் ஆகும்.
கு-ரை: நிலவு
- பிறை, ஆகுபெயர். புனல் - கங்கை. நிறைவாள்
-நிறைந்தகொடுமையையுடைய; சாதி அடை. இலகும் - விளங்கும். எழிலார்
- அழகுடையமகளிர். எழுச்சி உடைய உழத்தியருமாம். கடல் முத்துக்கள்
வயலை அடைகின்றன. வெள்ளத்தில் மிதந்த வரலாறு பற்றி, கடலார்
வேணுபுரம் என்றார்.
2. பொ-ரை:பாம்பைக்
கையில் கங்கணமாக அணிந்தவனும், மூங்கில்
போன்று திரண்ட தோளினையும் குராமலர் அணிந்த கூந்தலினையும் உடைய
உமையம்மையை ஒருகூறாக உடையவனும் ஆகிய சிவபிரானுக்கு இடம்,
மறையாதகொடையாளரும், தம்மோடு பழகியவர்களை நட்புக் கொண்டு
ஒழுகுபவர்களும் ஆகிய நல்லோர் வாழும் வேணுபுரம் ஆகும்.
|