|
*
* * * * * * 7 |
1651.
|
ஏவும்
படைவேந் தனிரா வணனை
ஆவென் றலற அடர்த்தா னிடமாந்
தாவும் மறிமா னொடுதண் மதியம்
மேவும் பொழில்சூழ் வேணு புரமே. 8 |
1652.
|
கண்ணன்
கடிமா மலரிற் திகழும்
அண்ணல் லிருவர் அறியா இறையூர்
வண்ணச் சுதைமா ளிகைமேற் கொடிகள்
விண்ணில் திகழும் வேணு புரமே. 9 |
7.
* * * * * * *
8.
பொ-ரை: இலக்குத் தவறாது செல்லும் கணைகளொடுகூடிய
விற்படையை உடைய இராவணனை ஆ என்று அலறுமாறு அடர்த்தருளிய
சிவபிரானுக்குரிய இடம், தாவிச்செல்லும் மான்கன்றுகளை உடையதும்,
குளிர்ந்த பொழில்கள் சூழ்ந்ததுமான வேணுபுரம் ஆகும்.
கு-ரை:
ஏவும்படை - குறிதவறாது வினையாற்றும் ஆயுதம். ஆ
என்று அலற - அலறுவோர் ஒலிக் குறிப்புக்களுள் ஆ என்பது
தலைமையானது. அஃது ஆஆ என அடுக்கியும் பின் ஆவா என்று
உடம்படுமெய் பெற்றும் வரும். அதனைத் திருமுறைகளில் பல இடங்களில்
காணலாம். அடர்த்தான் - தாக்கியவன். மறிமான் - மான்கன்று; மறிகளும்
மான்களும் ஆம். பொழிலின் உள்ளே மானும் மேலே மதியமும் மேவும்
என்க; மதியின் களங்கமுமாம்.
9.
பொ-ரை: திருமாலும், மணம் பொருந்திய சிறந்த தாமரை மலரில்
உறையும் நான்முகனும் ஆகிய இருவரும் அறியாதவாறு உயர்ந்து நின்ற
இறைவனது இடம், அழகிய சுதை தீட்டப்பட்ட மாளிகைகளின்மேல்
கட்டப்பட்ட கொடிகள் வானத்தில் திகழும் வேணுபுரம் ஆகும்.
கு-ரை:
கண்ணன் - (திருமால்) கரியவன். கடி - மணம். மலர்-தாமரை.
அண்ணல் - பிரமன். இறை - இறைவன். (சிவன்) வண்ணம் -அழகு. சுதை -
சுண்ணம்.
|