1685.
|
மணிநீள்
முடியான் மலையை அரக்கன்
தணியா தெடுத்தான் உடலம் நெரித்த
அணியார் விரலாய் அழுந்தை மறையோர்
பணிமா மடம்மன் னியிருந் தனையே. 9 |
1686
|
முடியார்
சடையாய் முனம்நா ளிருவர்
நெடியான் மலரான் நிகழ்வா லிவர்கள்
அடிமே லறியார் அழுந்தை மறையோர்
படியால் தொழமா மடம்பற் றினையே. 10 |
1687.
|
அருஞா
னம்வல்லார் அழுந்தை மறையோர்
பெருஞா னமுடைப் பெருமா னவனைத் |
வேரியார் (தேன்போலும்
இனியர்), என்பதன் முதற்குறுக்கம் எனல்
அமைவுடையதன்று.
9.
பொ-ரை: மணிகள் இழைத்த நீண்ட மகுடம்
சூடியமுடியனாகிய
இராவணன் கயிலைமலையைப் பொறுமையின்றி எடுத்தபோது, அவனது
உடலை நெரித்த அழகிய கால் விரலை உடையவனே! அழுந்தைப் பதியில்
மறையவர் போற்ற அழகிய மடம் என்னும் கோயிலில் நீ நிலையாக
எழுந்தருளியுள்ளாய்.
கு-ரை:
மணிமுடி - ரத்நகிரீடம். அரக்கன் - இராவணன், நெரித்த
-நொறுங்கிய, அணி - அழகு. பணி - பணிகின்ற.
10.
பொ-ரை: சடைமுடியை உடையவனே! முற்காலத்தே திருமால்
பிரமன், ஆகிய இருவர் தம்முள் செருக்கி உன் அடிமுடிகளை அறிய
முற்பட்டு அறியாதவர் ஆயினர். அழுந்தைப்பதியுள் மறையவர்
விதிமுறைப்படி வழிபட வணங்கிப் போற்ற, சிறந்த மடம் எனப்பெயரிய
கோயிலில் நீ விளங்குகின்றாய்.
கு-ரை:
முடியார் சடையாய் - சடைமுடியுடையாய், நெடியான்
-திரிவிக்கிரமனாகிய மாயோன். அடிமேல் - அடிமுடி, படியால்-விதிப்படி.
பற்றினை - பற்றாகக் கொண்டாய்.
11.
பொ-ரை: எய்தற்கரிய திருவருள் ஞானம் பெற்றவர்களாகிய
மறையவர் வணங்கிப் போற்ற அழுந்தைப் பதியில் விளங்கும் பெரிய
ஞானமே வடிவாக உடைய பெருமானை, திருஞானசம்பந்தன்
|