பதிக
வரலாறு:
பாலறாவாயர்
மன்றாடும் ஐயன் திருக்கூத்துக் கும்பிட்டு அணைவுறும்
நாளில் கைம்மான் மறியார் கழிப்பாலையுள் அணைந்து இம் மெய்ம்மாலைச்
சொற்பதிகம் பாடினார்.
பண்:
இந்தளம்
ப. தொ. எண்:
157 பதிக
எண்: 21
திருச்சிற்றம்பலம்
1688.
|
புனலா
டியபுன் சடையா யரணம்
அனலா கவிழித் தவனே யழகார்
கனலா டலினாய் கழிப்பா லையுளாய்
உனவார் கழல்கை தொழுதுள் குதுமே. 1 |
1689.
|
துணையா
கவொர்தூ வளமா தினையும்
இணையா கவுகந் தவனே யிறைவா
கணையால் எயிலெய் கழிப்பா லையுளாய்
இணையார் கழலேத் தஇடர் கெடுமே. 2 |
1.
பொ-ரை: கங்கை நீரில் மூழ்கிய சடையை உடையவனே!
முப்புரங்களையும் அழலெழுமாறு விழித்து எரித்தவனே! அழகிய நெருப்பில்
நின்று ஆடல் புரிபவனே! கழிப்பாலையுள் எழுந்தருளியவனே! உன்னுடைய
நீண்ட திருவடிகளைக் கைகளால் தொழுது நினைகின்றோம்.
கு-ரை:
புன்சடையாய் - பொன்போலும் சடையுடையாய், அரணம்
-திரிபுரக்கோட்டை, திரிபுரத்தை விழித்தெரித்தான் என்றும் வரலாறுண்டு.
கனல் - தீ, உன வார்கழல் - உன்னுடைய நீள்கழலடிகள். (பார்க்க:
தி.2ப.2பா.9) உள்குதும் - தியானம் செய்வோம்.
2.
பொ-ரை: தனக்குத் துணையாகுமாறு தூய அழகிய
உமையம்மையையும் உன்திருமேனியின் ஒருபாகமாக இணைத்துக்கொண்டு
மகிழ்ந்தவனே! இறைவனே! முப்புரங்களைக் கணையால்
|