1695.
|
எரியார்
கணையால் எயிலெய் தவனே
விரியார் தருவீழ் சடையாய் இரவிற்
கரிகா டலினாய் கழிப்பா லையுளாய்
உரிதா கிவணங் குவனுன் னடியே. 8 |
1696.
|
நலநா
ரணன்நான் முகன்நண் ணலுறக்
கனலா னவனே கழிப்பா லையுளாய்
உனவார் கழலே தொழுதுன் னுமவர்க்
கிலதாம் வினைதான் எயிலெய் தவனே. 9 |
1697.
|
தவர்கொண்
டதொழிற் சமண்வே டரொடுந்
துவர்கொண் டனர்நுண் துகிலா டையரும் |
8. பொ-ரை:
தீக்கடவுள் பொருந்திய கணையால் முப்புரங்களை
அழித்தவனே! விரிந்து விழும் சடைக்கற்றையை உடையவனே! இரவில்
கரிந்த சுடுகாட்டில் ஆடுபவனே! கழிப்பாலையில் விளங்குபவனே! உன்
திருவடிகளை எனக்கு உரியவாகக் கொண்டு வணங்குவேன்.
கு-ரை:
எரிஆர்கணை - அக்கினியை நுனியிற் பெற்ற திருமாலாகிய
பாணம். எயில் - (முப்புரம்) மும்மதில், கரிகாடல் - கரிந்த காடு.
காழிகாடலனே (பதி.156, பா.3) கழிகாடு ஆடலனே என்பதன் விகாரம்
என்றாருமுளர். உரிது - உரியது.
9. பொ-ரை:
நன்மைகளைப் புரியும் திருமால், நான்முகன் இருவரும்
அடிமுடி காண்போம் என்று உன்னை நண்ணியபோது கனல்வடிவோடு
ஓங்கி நின்றவனே! கழிப்பாலையில் எழுந்தருளியவனே! முப்புரங்களை எய்து
எரித்தவனே! உன்னுடைய நீண்டதிருவடிகளையே தொழுது நினைவார்க்கு
வினைகள் இல்லையாகும்.
கு-ரை:
நலம் - காத்தற்றொழிலாகிய நன்மை, அழகும் ஆம். உன
-உன்னுடைய. (ஆறனுருபு பன்மை பார்க்க: தி.2 ப.2 பா.1). உன்னுமவர்
-தியானம் புரிபவர். எயில் எய்தவன் - திரிபுராரி, முப்புரமெரித்த முதல்வன்.
வினைதான் இலதாம் என்க.
10.
பொ-ரை : தவத்தினராகிய வேடங்கொண்டு திரிவதைத்
தொழிலாகக் கொண்ட போலியான சமண்துறவி வேடத்தினரும்
|