பக்கம் எண் :

421

அவர்கொண் டனவிட் டடிகள் உறையும்
உவர்கொண் டகழிப் பதியுள் குதுமே.    10
1698.



கழியார் பதிகா வலனைப் புகலிப்
பழியா மறைஞா னசம்பந் தனசொல்
வழிபா டிவைகொண் டடிவாழ்த் தவல்லார்
கெழியா ரிமையோ ரொடுகே டிலரே.     11

திருச்சிற்றம்பலம்


பழுப்பு நிறம் ஏற்றிய நுண்ணிய ஆடையைப் போர்த்துத்திரியும்
புத்தர்களும் ஆகிய அவர்கள் கொண்ட கொள்கைகள் உண்மையானவை
அல்ல எனவிடுத்துத் தலைமைக்கடவுளாக விளங்கும் சிவபிரான் உறைவதும்,
உவர் நீரையுடைய உப்பங்கழிகளை உடையதும் ஆகிய கழிப்பாலையை நாம்
நினைத்துப் போற்றுவோம்.

     கு-ரை: சமண் வேடர்க்குரிய தொழிலன்று. தவர்
(தவத்தோர்)க்குரிய தொழிலை(ப்போலியா)க் கொண்டவர். துவர் - பழுப்பு
நிறம். நுண்துகில் -மெல்லிய துகில். துகில் - ஆடை; ஈண்டு
இருபெயரொட்டு, அவர் -அப்புறப்புறச்சமயத்தார். கொண்டன - கொண்ட
கொள்கைகள், வினையாலணையும் பெயர். அடிகள் - பரமேசுவரன். உவர்
கொண்ட கழிப்பதி - உவர் நீர் கொண்ட கடற்கழியிலுள்ள பாலைப்பதி.
‘உள்குதும்’ என முதற்பாட்டிற் கூறியதே முடிவிலுங் கூறியதால் சிறப்பாகத்
தியானம் புரிதற்குரிய தலமென்றுணர்க. மூவர் திருப்பதிகங்களும்
இத்தலத்தின் தனிச்சிறப்பை விளக்குகின்றன.

     11. பொ-ரை : உப்பங்கழிகள் பொருந்திய தலமாகிய கழிப்
பாலைத்தலைவனாகிய சிவபிரானை, புகலிப்பதிக்குரியவனாய் மறை
நெறிவளரத் தோன்றிய ஞானசம்பந்தன் போற்றிப் பரவிய
இத்திருப்பதிகத்தை ஓதுவதையே வழிபாடாகக் கொண்டு போற்றவல்லவர்
வானோர்களோடு பொருந்தி விளங்குவர். கேடு முதலியன இல்லாதவர்
ஆவர்.

     கு-ரை: காவலன் - சிவபிரான். “மறைஞானசம்பந்தன்” என்ற
திருப்பெயர் ‘வேதநெறி தழைத்தோங்கப் புனிதவாய் மலர்ந்தழுத
சிறப்பிற் பெற்றது. அகரம் - ஆறனுருபு பன்மை. வழிபாடு இவை -
இத்திருப்பதிகப்பாடல் வழிபாடு, இமையோரொடு கெழியார் -வானோரொடு
பொருந்திய விளங்குவார். கேடு இலர் - பிறவி முதலாய கேடு
இல்லாதவராவர்.