பக்கம் எண் :

432

விரையா ரும்வெண்நா வலுள்மே வியஎம்
அரவா எனும்ஆ யிழையா ளவளே.     9
1718.



புத்தர் பலரோ டமண்பொய்த் தவர்கள்
ஒத்தவ் வுரைசொல் லிவையோ ரகிலார்
மெய்த்தே வர்வணங் கும்வெண்நா வலுளாய்
அத்தா அருளாய் எனும் ஆயிழையே.   10
1719. வெண்நா வலமர்ந் துறைவே தியனைக்
கண்ணார் கமழ்கா ழியர்தந் தலைவன்


காண மருவி வெருவுமாறு அழலுருவாய் நிமிர்ந்தவனே, மணம் கமழும்
வெண்ணாவலுள் மேவிய எம் அரவாபரணனே! என்று கூறுகின்றாள்.

     கு-ரை: திரு - இலக்குமி. மருவா - மருவி. வெருவா - அச்சத்தால்
வாயால் அரற்றி (நிற்க) என்று ஒரு சொல் வருவித்து முடிக்க. வெருவி
(நிற்க) அழலாய் நிமிர்ந்தாய் என்றபடி. விரை - மணம். அரவா
-பாம்பணிந்தவனே. ஹர! வா எனலும் பொருந்தும். ‘எம் அரனேயோ
என்றென்று’

     10. பொ-ரை: ஆராய்ந்து பூண்ட அணிகலன்களை உடைய என் மகள்
‘புத்தர்கள் பலரோடு, பொய்யான தவத்தைப் புரியும் சமணர்கள், தமக்குள்
ஒத்த உரைகளைக்கூறி உன்னை அறியாதவராயினர். உண்மைத் தேவர்கள்
வந்து வணங்கும் வெண்ணாவலுள் வீற்றிருக்கும் இறைவனே, அத்தனே,
அருளாய்’! என்று கூறுவாள்.

     கு-ரை: அமண் - சமணர். பொய்த்தவர்கள் -மெய்த்தவரல்லாதவர்கள்;
பொய்த்தவத்தை யுடையவர்கள் என்று ஒரு மொழியும் தொடர்மொழியுமாக்
கொள்ளலாம்.

     ஒத்தவ்வுரை:- வகரம் விரித்தல் விகாரம். ஓரகிலார் - உணரமாட்டார்.

     11. பொ-ரை: வெண்ணாவலின் கீழ் அமர்ந்துறையும் வேதங்களை
அருளிய இறைவனை, கண்களில் நிலைத்து நிற்பதும் மணம்