பக்கம் எண் :

447

நீங்கு நீரநெல் வாயி லார்தொழ
ஓங்கி னாரெம துச்சி யாரே.       2
1744.



நிச்ச லேத்துநெல் வாயி லார்தொழ
இச்சை யாலுறை வாரெம் ஈசனார்
கச்சை யாவதோர் பாம்பி னார்கவின்
இச்சை யாரெம துச்சி யாரே.       3
1745



மறையி னார்மழு வாளி னார்மல்கு
பிறையி னார்பிறை யோடி லங்கிய
நிறையி னாரநெல் வாயிலார் தொழும்
இறைவ னாரெம துச்சி யாரே.      4


மேலான தன்மைகளை உடையவர். ஓடும் நீரினைஉடைய நெல்வாயில்
என்னும் தலத்தினர். நாம் தொழுமாறு புகழால் ஓங்கி விளங்குபவர். அவர்
எம்முடிமேல் விளங்கும் மாண்பினர்.

     கு-ரை: மதில்மேல் - திரிபுரத்து மதிலின்மீது. கணை - பாணம்,
வாங்கினார் - (வில்லை) வளைத் (துஎய்) தார். வெள்ளம் - கங்கைப்
பெருக்கு, தலையாயதன்மையர் - முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப்
பழம்பொருளாந் தன்மை முதலிய ஆறும் உடையவர் ஷாட்குண்யர்.
எண்குணமுமாம். நீங்கும் நீர - ஓடும் ‘நீர்ப் பெருக்காகிய வளமுடைய.
நீள்கு என்பதன் மரூஉவே நீங்கு என்பது. ‘நீங்கிற்றெறூஉம் குறுகுங்கால்
தண் என்னுந் தீ’ (குறள் 1104) என்னுங் குறளுக்குப் பரிமேலழகர் எழுதிய
உரையை நுணுகி நோக்கின் இது விளங்கும்.

     3. பொ-ரை: நாள்தோறும் நாம் ஏத்தவும் தொழவும் நெல் வாயிலில்
இச்சையோடு விளங்குபவர். எம் ஈசர். பாம்பைக் கச்சையாக அணிந்தவர்.
உயிர்கட்கு இச்சை உண்டாதற் பொருட்டு, தான் இச்சா சக்தியோடு
விளங்குபவர். அவர் எம் உச்சியில் விளங்கும் மாண்பினர்.

     கு-ரை: நிச்சல் - நித்தல், நாடோறும். கச்சை - அரையிற் கட்டும்
கயிறு. வடம். அரவக்கச்சு. கவின் - அழகு. இச்சையார் - உயிரின்
இச்சைக்குக் காரணமான இச்சா சத்தியை உடையவர். ‘இச்சை உயிர்க்கு
அருள்நேசம் ஆகும்’ (சிவஞானசித்தியார், 83).

     4. பொ-ரை: வேதங்களை அருளியவர். மழுவாகிய வாளினை