1748.
|
ஆதி
யாரந்த மாயி னார்வினை
கோதி யார்மதில் கூட்ட ழித்தவர்
நீதி யாரநெல் வாயி லார்மறை
ஓதி யாரெம துச்சி யாரே. 7
|
1749.
|
பற்றி
னானரக் கன்க யிலையை
ஒற்றி னாரொரு கால்வி ரலுற
நெற்றி யாரநெல் வாயி லார்தொழும்
பெற்றி யாரெம துச்சி யாரே. 8
|
கொன்றைமலர். கார்நறுங்
கொன்றை (புறம் - கடவுள் வாழ்த்து) மல்குபேரினார் - நிறைந்த பெயர் (புகழ்)
உடையார். நீரினார் - கங்கை (ச்சடை) யர். இலங்கிய - விளங்கிய, பிறைக்கும்,
நீர்க்கும் பொது அடைமொழியாகக் கொள்ளலும் ஆம். ஏரினார் - அழகர்.
7.
பொ-ரை: உலகிற்கு ஆதிஅந்தமாக விளங்குபவர்.
குரோதமான செயல்களைப் புரிந்த அசுரர்களின் மதில் கூட்டங்களை அழித்தவர். நீதியை
உடையவர். நெல் வாயிலில் எழுந்தருளியிருப்பவர். மறைகளை ஓதியவர்.
அவர் எமது உச்சியில் உறைபவர்.
கு-ரை:
ஆதியார் - முதல்வர், அந்தமாயினார் - (சங்காரகாரணர்)
முடிவுமானார். வினை கோதியார் - குரோத வினையுடையார். திரிபுரத்தசுரர்.
குரோதி
என்பதன் திரிபு கோதி என்பது. கோதித்த நெஞ்சன்
(பாரதம்). மறையோதியார் - வேதங்களை ஓதி யருளியவர்.
8.
பொ-ரை: கயிலைமலையைப் பற்றி எடுத்த இராவணனை
ஒருகால்
விரலைப் பொருத்தி அவன் தலைகள் முழுவதும் அடர ஒற்றியவர்.
நெல்வாயிலில் விளங்குபவர். நாம் தொழும் தன்மையர். அவர் எமது
உச்சியில் உறைபவர்.
கு-ரை:
நெற்றி - இராவணனது உச்சி. ஆர் - பொருந்த. பெற்றியார் -
தன்மையையுடையவர்.
ஒரு
கால்விரல் உறநெற்றி ஆர ஒற்றினார் என்று இயைக்க.
|