பக்கம் எண் :

454

1757.



மருவு மான்மட மாதொர் பாகமாய்ப்
பரவு வார்வினை தீர்த்த பண்பினான்
இரவ னிந்திர நீலப் பர்ப்பதத்
தருவி சூடிடு மடிகள் வண்ணமே.    5
1758.



வெண்ணி லாமதி சூடும் வேணியன்
எண்ணி லார்மதி லெய்த வில்லினன்
அண்ண லிந்திர நீலப் பர்ப்பதத்
துண்ணி லாவுறு மொருவ னல்லனே.  6
1759.

கொடிகொள் ஏற்றினர் கூற்று தைத்தவர்
பொடிகொள் மேனியிற் பூண்ட பாம்பினர்


கூசன் காண் கூசாதார் நெஞ்சுதஞ்சே குடிகொண்ட குழகன்காண்’ என்ற
அப்பர் திருவாக்கில் வந்த கூசுதல் வேறு. இது வேறு. தேசம் ஆர் - தேசம்
(முழுதும்) நிறைந்த.

     5. பொ-ரை: இந்திர நீலப்பருவதத்து இறைவனது இயல்பு அருவிகளை
மாலையாகச் சூடி மகிழ்வதோடு தன்னைமருவிய மான்போன்ற கண்ணளாகிய
உமையம்மை ஒருபாகமாக விளங்க, தன்னைப் பரவுவார் வினைகளைப்
போக்குவதாகும்.

     கு-ரை: மருவு . . . பண்பினான் - அம்மையப்பராகத் தொழுத அன்பர்
கன்மத்தைத்தீர்த்த குணமுடையவன். இரவன் - இரத்தலைச் செய்தவன்,
இரவாகியவன். அன்பர் இரத்தற் குரிய வள்ளல். அருவி -மலையருவி,
கங்கையுமாம். வண்ணம் - இயல்பு.

     6. பொ-ரை: வெண்மையான நிலவைத் தரும் மதியைச் சூடும்
சடையினனும் பகைவரின் திரிபுரங்களை அழித்த வில்லினனும்,
தலைமையாளனும் ஆகிய இறைவன், இந்திரநீலப்பருவதத்துள் விளங்கும்
ஒருவன் அல்லனோ?.

     கு-ரை: வேணி - சடை. எண்ணிலார் - நினையாத பகைவர். வில் -
மேருவில். ‘அல்லனே’ ஏகாரம் வினா.

     7. பொ-ரை: கொடியில் கொண்ட விடையை உடையவர். எமனை
உதைத்தவர். பொடியணிந்த மேனியில் பாம்பினை