பக்கம் எண் :

456

1762.



கட்டர் குண்டமண் டேரர் சீரிலர்
விட்ட ரிந்திர நீலப் பர்ப்பதம்
எட்ட னைநினை யாத தென்கொலோ
சிட்ட தாயுறை யாதி சீர்களே.          10
1763.



கந்த மார்பொழில் சூழ்ந்த காழியான்
இந்தி ரன்றொழு நீலப் பர்ப்பதத்
தந்த மில்லியை யேத்து ஞானசம்
பந்தன் பாடல்கொண் டோதி வாழ்மினே. 11

திருச்சிற்றம்பலம்


     கு-ரை: பூவினான்-செந்தாமரை மலரிலுள்ள பிரமன. போற்று-துதி,
உறும்-அடையும். பாவியாது-தியானம் பண்ணாமல், கோவியா-கோபித்து,
கூற்றம் வரும் என்க.

     10. பொ-ரை: கட்டானவும் பருமையானவுமான உடலினராகிய
சமண புத்தர்கள் சிறப்பற்றவர். நம்மால் விட்டொழியத் தக்கவர். அவர்களை
விடுத்து இந்தி லப் பருவதத்து உறையும் மேலான ஆதியின் சீர்களை
எள்ளளவும் நினையாதிருப்பது ஏனோ?.

     கு-ரை. கட்டர்-உடற்கட்டுடையவர், சீர்-சிறப்பு. விட்டர்-வி்ட்டொழிய
நின்றவர், ‘விட்டல்வீடுதல்’ திருவிளையாடல். எள்தனை-எள்ளளவும்.
சிட்டதாய்-நல்லறிவுமயமாய். உறை-வாழும.் ஆதி-முதல்வன்.

     11. பொ-ரை: மணம் கமழும் பொழில் சூழ்ந்த காழிப் பதியானாகிய
ஞானசம்பந்தன் இந்திரனால் வழிபடப் பெற்ற நீலமலையில் விளங்கும்
அந்தம் இல்லாத பெருமானை ஏத்திய பாடல்களை ஓதி வழிபட்டு வாழுங்கள்.

     கு-ரை: கந்தம்-மணம். அந்தம் இல்லி-முடிவில்லாதவன்-அநந்தன்.