1772.
|
உழுது
மாநிலத் தேன மாகிமால்
தொழுது மாமல ரோனுங் காண்கிலார்
கழுதி னான்கரு வூரு ளானிலை
முழுது மாகிய மூர்த்தி பாதமே. 9 |
1773.
|
புத்தர்
புன்சம ணாதர் பொய்யுரைப்
பித்தர் பேசிய பேச்சை விட்டுமெய்ப்
பத்தர் சேர்கரு வூரு ளானிலை
அத்தர் பாத மடைந்து வாழ்மினே. 10 |
1774.
|
கந்த
மார்பொழிற் காழி ஞானசம்
பந்தன் சேர்கரு வூரு ளானிலை |
பின் அவனுக்கு அருள்
கொடுத்தவன். கூத்தன். அவன் கருவூர்
ஆனிலையில் விளங்கும் பெரியவன்.
கு-ரை:
கடுத்த-கோபித்த. தலை தோளும்-தலைகளும் தோள்களும்.
தாள்-திருவடி. அருள்கொடுத்தவன் என்க.
9. பொ-ரை:
எல்லாமாய் விளங்கும் இறைவனின் பாதங்களைப்
பன்றி வடிவெடுத்துப் பெரிய நிலத்தை உழுது சென்று முயன்ற திருமால்,
பிரமன் ஆகியோர் தொழுதும் காண்கிலர். அத்தகைய பெருமான் கருவூர்
ஆனிலையில் நாம் எளிதின் வணங்க எழுந்தருளியுள்ளான்.
கு-ரை:
ஏனம்-பன்றி.
கழுதினான்-பேயன். முழுதும் ஆகிய மூர்த்தி-
யாவையும் ஆய ஈசர் (பா.4)
10. பொ-ரை:
புத்தர்களும் புன்மையான அறிவற்ற பொய்யுரைகளைக்
கூறும் பித்தர்களாகிய சமணர்களும் பேசும் பேச்சுக்களை விட்டு
உண்மையான பக்தர்கள் சேரும் கருவூர் ஆனிலையில் விளங்கும் மேலான
இறைவனின் திருவடிகளை அடைந்து வாழுங்கள்.
கு-ரை:
ஆதர்-அறிவிலார். மெய்ப்பத்தர்-உண்மை அன்பர்.
அத்தர்-இறைவர், உயர்ந்தவர்.
11. பொ-ரை:
மணம் பொருந்திய பொழில்கள் சூழ்ந்த சீகாழிப்
பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் கருவூர் ஆனிலையை அடைந்து
|