பக்கம் எண் :

463

 29. திருப்புகலி

பதிக வரலாறு:

     137 -வது தலைப்பைக் காண்க

திருவிராகம்

பண்: இந்தளம்

ப.தொ.எண்: 165                              பதிக எண்: 29

திருச்சிற்றம்பலம்

1775.



முன்னிய கலைப்பொருளு மூவுலகில் வாழ்வும்
பன்னிய வொருத்தர்பழ வூர்வினவின் ஞாலந்
துன்னியிமை யோர்கள்துதி செய்துமுன் வணங்குஞ்
சென்னியர் விருப்புறு திருப்புகலி யாமே.    1
1776.



வண்டிரை மதிச்சடை மிலைத்தபுனல் சூடிப்
பண்டெரிகை யாடுபர மன்பதிய தென்பர்
புண்டரிக வாசமது வீசமலர்ச் சோலைத்
தெண்டிரை கடற்பொலி திருப்புகலி யாமே.  2


     1. பொ-ரை: பொருந்திய கலைகளின் பொருளையும் மூவுலக
வாழ்வையும் உயிர்கட்கு ஆராய்ந்து அளித்துக் காக்கும் ஒருவராக விளங்கும்
சிவபிரானின் பழமையான ஊர் யாதென வினவின், தேவர்கள் மண்ணுலகை
அடைந்து துதி செய்து வணங்கும் சென்னியில் உள்ளவராகும் இறைவர்
எழுந்தருளிய திருப்புகலி என்னும் தலமாகும்.

     கு-ரை: முன்னிய-பொருந்திய, முந்திய, நினைக்க. கலை-அறுபத்து
நான்கு கலைகள்; ‘உவமையிலாக் கலைஞானம்’ எனலுமாம். மூவுலக வாழ்வு
- மூன்று உலகத்திலும் வாழும் வாழ்க்கை. பன்னிய-ஆராய்ந்த,
ஒருத்தர்-தனிமுதல்வர், வினவின்-கேட்டால்; ஞாலம்-பூமி. துன்னி-நெருங்கி,
இமையோர்கள்-தேவர்கள். துதி-தோத்திரம், சென்னியர் ஆரம்போல
மேம்பட்டவர், சென்னியிலுள்ளவர் என்றுமாம்.

     2. பொ-ரை: வளமையான அலைகளோடு கூடிய கங்கையை மதி
சூடிய சடையின்மேல் தாங்கிப் பழமையான தீயைக் கையின்கண்